சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் தற்போதைய கதைக்களத்தில், ரோகிணி – மனோஜ் விவாகரத்து வழக்கு 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த விஷயத்தை வீட்டில் சொல்லாமல், மனோஜுக்கு வெளிநாட்டு உள்ள தமிழ் குடும்பத்தை சேர்ந்த பெண்ணுடன் விஜயா நிச்சயதார்த்தம் செய்துவிட்டார்.
நிச்சயதார்த்தம் முடிந்திருந்தாலும், விவாகரத்து விரைவில் கிடைக்குமா என அண்ணாமலை விஜயாவிடம் கேட்கிறார். அதற்கு விஜயா ஒரு சில பொய்களை கூறி சமாளித்து விடுகிறார். இது எத்தனை நாட்களுக்கு தொடரும், உண்மை வெளிவரும்போது என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அதிர்ச்சியில் சிந்தாமணி
இன்றைய எபிசோடின் முடிவில் நாளைய எபிசோடிற்கான புரோமோ வெளியிட்டிருந்தனர். இதில், சிந்தாமணி தனது மகள் மீனாவின் தம்பியுடன் ஒரே வண்டியில் செல்வதை பார்த்து அதிர்ச்சியடைகிறார்.

இதுவே இவருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுக்க, சத்யா – ரேகா இருவரும் காதலித்து வரும் விஷயம் சிந்தாமணிக்கு தெரியவந்தால் என்னாகுமோ?



