உலகம்

நிதி அமைச்சகம் இந்தக் கருத்துகளைத் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது; அத்தகைய முன்மொழிவு எதுவும் இல்லை என்றும், குடிமக்கள் இத்தகைய வதந்திகளை நம்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் விளக்கமளித்துள்ளது. மட்டுமின்றி, சரிபார்க்கப்படாத தகவல்களை நம்புவதையோ அல்லது பரப்புவதையோ தவிர்க்குமாறு குடிமக்களை அறிவுறுத்துவதுடன், தவறான தகவல்கள் பொதுமக்களிடையே தேவையற்ற பீதியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கோவில்கள் வசமிருக்கும் தங்கத்தை அரசு பணமாக்கும் முடிவா? வெளியான உண்மை | Temple Gold Monetisation Rejects 4,000 டன்கள் வரை மேலும், எந்தவொரு அதிகாரப்பூர்வ கொள்கை முடிவோ அல்லது நிதித் திட்டமோ, அங்கீகரிக்கப்பட்ட அரசுத் தளங்கள் மற்றும் வழிகள் வாயிலாக மட்டுமே அறிவிக்கப்படும் என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள கோயில்களில் பக்தர்களால் பல நூற்றாண்டுகளாகச் செலுத்தப்பட்ட காணிக்கைகள் மூலம் 3,000 முதல் 4,000 டன்கள் வரை தங்கம் இருப்பு உள்ளதாக உலக தங்க கவுன்சில் மதிப்பிட்டுள்ளது. கோவில்கள் வசமிருக்கும் தங்கத்தை அரசு பணமாக்கும் முடிவா? வெளியான உண்மை | Temple Gold Monetisation Rejects இந்த தங்கம் கோயில்களின் பாதுகாப்பறைகளில் சேமிக்கப்பட்டு வருகிறது. திருப்பதி கோயில், பத்மநாபசாமி கோயில் உள்ளிட்ட கோயில்கள் வசம் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள தங்கம் உள்ளன. ஈரான் போர் காரணமாக அந்நிய செலாவணியை சேமிக்க அரசு தங்கம் மீதான இறக்குமதி வரியை அதிகரித்தது. இந்த நிலையிலேயே வீடுகளிலும் மத அமைப்புகளிடமும் தங்கம் எந்த பயனும் இல்லாமல் இருப்பதாகவும் அதனை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

MTM Radio – மறத்தமிழர் முரசம்

தமிழ் மரபு, பண்பாடு, வரலாறு மற்றும் உண்மைச் செய்திகளை முரசு ஒலியாய் ஒலிக்கச் செய்யும் இணைய வானொலி.