இட்லி விலை 315 ரூபாய்… கவனம் ஈர்த்துவரும் ஒரு செய்தி

1 Min Read

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூரு நகரில், ஒரு பிளேட் இட்லி விலை 315 ரூபாய் என்பதை அறிந்து தான் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார் பயணி ஒருவர்.

சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தி கவனம் ஈர்த்துவருகிறது.

இட்லி விலை 315 ரூபாய்…

பெங்களூருவிலுள்ள கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்திலுள்ள ராமேஷ்வரம் கேஃப் என்னும் உணவகத்தில் ஒரு பிளேட் நெய் பொடி இட்லி சாப்பிட்டுள்ளார் ஒரு பயணி.

இட்லி விலை 315 ரூபாய்... கவனம் ஈர்த்துவரும் ஒரு செய்தி | Plate Idli Rs315 In Bengaluru Sparks Debate

பில் வந்ததும் பில் தொகையைப் பார்த்த அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். ஆம், ஒரு பிளேட் இட்லிக்கு 315 ரூபாய் கட்டணம் என பில்லில் குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது.

விடயம் என்னவென்றால், விமான நிலையத்துக்கு வெளியே உள்ள உணவகங்களை விட, இது மூன்று மடங்கு அதிக கட்டணம் ஆகும்.

விடயம் என்னவென்றால், விமான நிலையத்துக்கு வெளியே உள்ள உணவகங்களை விட, இது மூன்று மடங்கு அதிக கட்டணம் ஆகும்.

அவர் சமூக ஊடகம் ஒன்றில் தான் இட்லி சாப்பிட்ட பில்லை வெளியிட, விமான நிலையங்கள் அங்குள்ள உணவகங்களுக்கு கட்டுப்பாடுகள் எதுவும் விதிப்பதைல்லையா அல்லது கடைக்காரர்கள் தங்கள் இஷ்டத்துக்கு விலைகளை நிர்ணயித்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளார்களா என கேள்வி எழுப்பியுள்ளார்கள் பலரும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *