பதினொன்றாம் பாவகத்தில் ராகு

Karan
By
Karan
2 Min Read
ஒருவருடைய ஜாதகத்தில் பதினோராம் வீடு என்பது அவருடைய வாழ்க்கையில் லாப ஸ்தானத்தை குறிக்கின்றது. ஒருவருக்கு வியாபாரத்தில் ஏற்படக்கூடிய லாபத்தையும், வாழ்வில் ஏற்படக்கூடிய சுகங்களையும் இந்த பதினோராம் வீட்டை வைத்து தான் நிர்ணயிக்க முடியும். உங்களின் மூத்த சகோதரரைப் பற்றி இந்த வீட்டை வைத்து கூறலாம். உங்களின் நண்பர்களை நிர்ணயிப்பதும் இந்த 11ஆம் வீடுதான்.
பதினோராம் வீட்டில் ராகுவை கொண்டவர்கள் பொதுவாக பிரபலமானவர்களாக இருப்பார்கள். நீங்கள் வசித்துக் கொண்டிருக்கும் உங்கள் ஊரில் உங்களைப் பற்றி விசாரித்தால் உங்களை, தெரியாது என்று யாரும் கூற மாட்டார்கள். அந்த அளவிற்கு நீங்கள் உங்களுக்கும் உங்கள் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் உதவி செய்தவராக இருப்பீர்கள். சூழ்நிலை காரணமாக உங்கள் சொந்த ஊரை விட்டு வெளியூருக்கு சென்றவறாக இருந்தாலும் கூட, உங்கள் சொந்த ஊரில் வசிப்பவர்கள் உங்களை மறக்காமல் நினைவில் வைத்திருப்பார்கள். உங்கள் ஊரில் முக்கிய புள்ளிகளாக இருக்கும் தலைவர்களுக்கு நீங்கள் மிகவும் நெருக்கமானவராக தான் இருப்பீர்கள். இதேபோன்று அரசாங்கத்தில் உயர் பதவியில் உள்ளவர்களும் உங்களுக்கு சுலபமாக நண்பர்களாகி விடுவார்கள்.
நீங்கள் விவசாயம் செய்வதில் அக்கறை காட்டினால் அதிகமான லாபம் கிடைக்கும். பால் சம்பந்தப்பட்ட தொழில் செய்தாலும் நல்ல பலன் கொடுக்கும். சொந்த வீடு வாகனம் வைத்துள்ளவர்களாகதான் இருப்பீர்கள். சிலருக்கு வாழ்க்கையின் ஆரம்ப காலமானது கஷ்டமாக இருந்தாலும், பிற்பகுதியில் திடீர் அதிர்ஷ்டமானது வந்து உங்களை புகழின் உச்சியில் அமர்ந்தி விடும்.
உங்கள் வாழ்க்கையானது, உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் அளவிற்கு சிறப்பான வாழ்க்கையாக தான் அமைந்திருக்கும். பரம்பரை பரம்பரையாகவே மிகுந்த செல்வாக்குப் படைத்த குடும்பத்தில் பிறந்தவராக இருப்பீர்கள். அப்படி இல்லை என்றாலும் உங்களுக்கு வரப்போகும் மனைவியின் மூலம் அதிக சொத்து கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
11இல் ராகுவால் ஏற்படும் பிரச்சினைகள்
உங்களுக்கு மூத்த சகோதரர் இருப்பதற்கு அதிக வாய்ப்பு இல்லை. அப்படியே இருந்தாலும் அவர்களுடன் உங்களுக்கு சுமுகமான உறவானது ஏற்படாது. மூத்த சகோதரருக்கும் உங்களுக்கும் இடையே ஏதாவது ஒரு வகையில் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். மூத்த சகோதரரை தவிர மற்ற உறவுகளுக்கிடையே சுமூகமான உறவானது உங்களுக்கு ஏற்படும்.
நீங்கள் சொந்த தொழில் செய்பவர்களாக இருந்தால் பங்குதாரர்களை சேர்த்துக் கொள்ளக்கூடாது. நீங்கள் கணக்கு வழக்குகளை பார்ப்பதில் அதிக அக்கறை காட்ட மாட்டீர்கள். இதனால் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது உங்கள் பங்குதாரர்களிடம் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் உங்கள் தொழிலை நீங்கள் தனித்து செயல்படுவது தான் நல்லது. மற்றபடி பதினொன்றில் ராகு உங்களுக்கு நல்லதுதான் கொடுப்பார்.
அப்படி ராகு திசை நடப்பில் இருந்தால் அலைச்சல் அதிகமாக இருக்கும் வருமானம் அதிகரிக்கும் தண்ணீர் போல காசு பணம் செலவு செய்வீர்கள் கூறுக்கு வழியில் சென்று பணம் சம்பாதிக்கும் நிலை ஏற்படும் அரசுக்கு புறம்பான தொழிலில் கொண்டு செல்லவும் வாய்ப்பு உருவாகும்.
குடிசையில் இருக்கும் உங்களை கோபுரத்தில் அமர வைக்கும் நல்ல வளர்ச்சியை கொடுக்கும் செல்வந்தராக மாறும் நிலை ஏற்படும். இறுதியில் எப்போது வேண்டுமானாலும் சரிவுக்கு தள்ளப்படும் கவனமாக இருப்பது நல்லது.
ஜாதகம் பார்ப்பது மற்றும் திருமண பொருத்தம் பார்க்கப்படும். ஜாதகம் இல்லாதவர்களுக்கு புதியதாக ஜாதகம் நோட்டில் எழுதி அனுப்பப்படும். உங்கள் பிரச்சனைக்கு ஏற்ற கோவில் தளங்கள் கூறப்படும்.
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *