இலங்கை விமானப்படையின் 5ஆவது குவாட்ரேங்கள் கிண்ண கோல்ஃப் போட்டி வெற்றிகரமாக நிறைவு

1 Min Read

இலங்கை விமானப்படையால் ஐந்தாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட குவாட்ராங்கள் கோல்ப் கோப்பை ஆடவர் மற்றும் மகளிர் கழகங்களுக்கு இடையேயான கோல்ஃப் போட்டிகள் விமானப்படைத் தளபதி, எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவின் வழிகாட்டலின் கீழ் , கடந்த 14ஆம் திகதி சிகிரியா சிட்டடெல் கோல்ஃப் மைதானத்தில் முதன்முறையாக நடைபெற்றது.

இப்போட்டியில் 60 இற்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் சர்வதேசப் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். மேலும், விமானப்படை ஈகில் கோல்ஃப் லிங்க்ஸ் கழகம், றோயல் கொழும்பு கோல்ஃப் கழகம், விக்டோரியா கோல்ஃப் கழகம் மற்றும் நுவரெலியா கோல்ஃப் கழகம் ஆகிய இலங்கையின் 4 முன்னணி கோல்ஃப் கழகங்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றன.

றோயல் கொழும்பு கோல்ஃப் கழகம் 322 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்தை வென்றது. விக்டோரியா கோல்ஃப் கழகம் இரண்டாம் இடத்தையும், நுவரெலியா கோல்ஃப் கழகம் மூன்றாம் இடத்தையும் பிடித்தன. விக்டோரியா கோல்ஃப் கழகத்தின் ஹரூன் அஸ்லம் போட்டியின் சிறந்த வீரராகவும், பிரவீனா துனுவில்ல போட்டியின் சிறந்த வீராங்கனையாகவும் அறிவிக்கப்பட்டனர்.

இந்தப் போட்டியின் பிரதான அனுசரணையாளராக JAT ஜேஏடி ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனமும், இணை அனுசரணையாளர்களாக பிரவுன்ஸ் ஈவி (பிரைவேட்) லிமிடெட், எல்ஓஎல்சி ஃபைனான்ஸ், ஜெட்வின் ஹோட்டல்ஸ் லிமிடெட், என்சிஜி ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் மற்றும் டிவிஎஸ் லங்கா (பிரைவேட்) லிமிடெட் ஆகிய நிறுவனங்களும் இருந்தன.

வெற்றியாளர்களுக்கான கிண்ணம் வழங்கும் விழா சிகிரியா கோட்டை கோல்ஃப் மைதானத்தில் நடைபெற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *