12-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஆட்டோ சாரதி உருவாக்கிய ரூ. 900 கோடி வணிகம்

4 Min Read

பெப்சி மற்றும் கோகோ-கோலா நிறுவனங்களின் ஆதிக்கம் நிறைந்த சந்தையில், சத்யா சங்கர் என்ற ஆட்டோ சாரதி எவ்வாறு ‘ஹவுஸ் ஆஃப் பிந்து’ என்ற உள்நாட்டு பிராண்டை உருவாக்கினார்?

முக்கியமான திருப்புமுனை

1984-இல் சத்யா சங்கர் 12-ஆம் வகுப்புக்குப் பிறகு தனது 18 வயதில் படிப்பை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அவரது தந்தை பெல்லாரேவைச் சேர்ந்த ஒரு ஏழை கிராமத்து பூசாரி; அவரது கல்விக்குச் செலவிடப் பணம் இருக்கவில்லை.

12-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஆட்டோ சாரதி உருவாக்கிய ரூ. 900 கோடி வணிகம் | Autorickshaw Driver Built 900 Crore Business

ஆனால், சங்கர் அதை ஒரு முட்டுச்சந்தாகக் கருதவில்லை; மாறாக, ஒரு பாதையாகவே பார்த்தார். அவர் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்தார். அது வறுமையிலிருந்து விடுபடுவதற்கான ஒரு வழியாக அமைந்தது.

அரசுத் திட்டம் ஒன்றின் கீழ் கடன் பெற்று, அவர் தனது முதல் வாகனத்தை வாங்கினார். ஓராண்டு காலம் சங்கர் அந்த ஆட்டோவை ஓட்டினார். கடினமாக உழைத்துத் தனது கடனை அடைத்த அவர், விரைவிலேயே அந்த ஆட்டோவை விற்றுவிட்டு ஒரு அம்பாசிடர் காரை வாங்கினார்.

வெறும் மாவட்ட எல்லைக்குள் மட்டுமல்லாமல், மாநில எல்லைகளைத் தாண்டியும் ஒரு டாக்ஸி சாரதியாகச் செயல்பட அவர் விரும்பினார். அந்த டாக்ஸியில்தான் அவருக்கு முதல் முக்கியமான திருப்புமுனை கிடைத்தது.

அவர் அடிக்கடி வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்றார். அவர்கள் எங்கிருந்து வந்திருந்தாலும், அவர்கள் முதலில் வாங்கும் பொருள் ஒரு போத்தல் குடிநீர் என்பதை அவர் கவனித்தார். அவர் சாலையின் மீது கவனம் செலுத்திக்கொண்டிருந்தபோது, ​​சுற்றுலாப் பயணிகள் தங்கள் உடல்நலத்தின் மீது கவனம் செலுத்திக்கொண்டிருந்தனர்.

இதில் ஒரு தொழில் வாய்ப்பு இருக்கிறது என்பதை அவர் உணர்ந்தார். அது சுத்தமான தண்ணீர். 1988-க்குள் சங்கர் அந்தக் காரை விற்றுவிட்டார். கார்களை ஓட்டுவதை விட, அவற்றிற்கான உதிரிபாகங்களை விற்பது அதிக நிலையான தொழில் என்பதை அவர் உணர்ந்தார்.

அவர் புத்தூரில் ஒரு சிறிய வாகன உதிரிபாகக் கடையைத் தொடங்கினார். விரைவில், உதிரிபாகம் வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் டயரும் தேவைப்படுவதை அவர் கவனித்தார். அதனால், அவர் ஒரு டயர் கடையைத் திறந்தார். ஆனால், மக்கள் பணம் செலுத்திய விதத்திலிருந்தே மிகச் சிறந்ததொரு அவதானிப்பு கிடைத்தது.

விவசாயிகளும் உள்ளூர் மக்களும் உதிரிபாகங்களை கடனுக்கு வாங்கி, அவற்றைச் சிறு தவணைகளாகத் திருப்பிச் செலுத்தினர். தமக்குச் சிறு தொகைகளாகப் பணம் செலுத்த முடிந்தால், வங்கியிடமும் அவ்வாறே செலுத்துவார்கள் என்பதை சங்கர் உணர்ந்தார்.

1994-இல், அவர் ‘பிரவீன் கேப்பிட்டல்’ என்ற நிதி நிறுவனத்தைத் தொடங்கினார். மற்ற நிதியுதவி அளிப்பவர்கள் பழைய வாகனங்களைப் புறக்கணித்த நிலையில், சங்கர் பயன்படுத்தப்பட்ட ஆட்டோக்கள் மற்றும் கார்களுக்குக் கடன் வழங்கினார்.

அவரும் ஒரு சாரதியாக இருந்ததால், சிரமப்படும் சாரதிகளின் நிலைமையை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. டாக்சி சாரதியாக சங்கர் தற்போது பணியாற்றவில்லை என்றாலும், நீண்ட 15 வருடங்களாக அந்த குடிநீர் திட்டம் அவருக்குள் மங்காமல் இருந்தது.

பிந்து ஃபிஸ் ஜீரா மசாலா

2000-இல் அவர் ஒரு முடிவுக்கு வந்தார். புத்தூர் அருகே, கனமழை பெய்யும் நரிமோகேரு என்ற கிராமத்தில் அவர் ஒரு தொழிற்சாலையை அமைத்தார். அந்த பிராண்டிற்கு பிந்து (கன்னடத்தில் ‘துளி’ என்று பொருள்) எனப் பெயரிட்டார்.

ஆனால் தண்ணீர் விற்பனை மட்டும் போதாது. சங்கருக்குப் பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். வட இந்தியாவில் ஒரு பயணத்தின்போது, ​​சோடா விற்கும் ஒரு சிறிய கடைக்கு அவர் சென்றார். அந்தக் கடைக்காரர் நுரைத்துக்கொண்டிருக்கும் பானத்தில் சீரகப் பொடியையும் உப்பையும் சேர்த்தார். அவரது நண்பர்கள் அதைக் குடித்தார்கள்; சங்கரோ அதை உற்று நோக்கினார்.

12-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஆட்டோ சாரதி உருவாக்கிய ரூ. 900 கோடி வணிகம் | Autorickshaw Driver Built 900 Crore Business

புத்தூருக்கு திரும்பிய சங்கர் பிந்து ஃபிஸ் ஜீரா மசாலாவை உருவாக்கினார். தொடக்கத்தில் எதிர்பார்த்தது போன்று விற்பனை நடக்கவில்லை. அவர் விடாமுயற்சியுடன் செயல்பட்டார். அவரிடம் விளம்பரத்திற்காகப் பெரிய அளவில் நிதி இல்லை; அதனால் நெடுஞ்சாலைகளில் இருந்த சுவர்களில் விளம்பரங்களை வரைந்தார்.

மெல்ல மெல்ல, வாய்மொழிப் பேச்சு மூலம் அது பரவியது. காரமான, கிராமத்து பாணி உணவுகளுடன் அருந்துவதற்கு மக்கள் விரும்பும் பானமாக Cold Bindu Fizz மாறியது. தற்போது சத்ய சங்கருக்கு 60 வயதுக்கு மேல் ஆகிறது. ஆனால், அவர் ஓய்வுபெறப்போகும் ஒருவரைப் போலத் தெரியவில்லை.

அவரது நிறுவனமான ‘எஸ்ஜி கார்ப்பரேட்ஸ்’ (SG Corporates) தற்போது 900 கோடி ரூபாய் விற்றுமுதல் அளவை எட்டியுள்ளது. ‘ஹவுஸ் ஆஃப் பிந்து’ (பானங்கள் மற்றும் சிற்றுண்டிப் பிரிவு) ரூ. 570 கோடியை ஈட்டுகிறது. ‘பிரவீன் கேப்பிட்டல்’ (நிதிச் சேவைப் பிரிவு) ரூ. 330 கோடியை ஈட்டுகிறது.

அவர் புகழ்பெற்ற சீரக மசாலா முதல் மாம்பழச் சாறுகள் மற்றும் தின்பண்டங்கள் வரை 55 விதமான பொருட்களை விற்பனை செய்கிறார். அவருக்கு கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தொழிற்சாலைகள் உள்ளன, மேலும் ஆந்திரப் பிரதேசத்தில் புதிய தொழிற்சாலைகள் வரவிருக்கின்றன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *