அமேசான் நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு தங்களது தரவு மையங்களை குளிர்விக்க கிட்டத்தட்ட 946 கோடி லிட்டர் தண்ணீரை பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.
தரவு மையங்களை குளிர்விக்க 946 கோடி லிட்டர் தண்ணீர்
அமேசான் நிறுவனம் உலக அளவில் உள்ள தங்களது தரவு மையங்களை(Data centers) குளிர்விக்க 2025ம் ஆண்டு மட்டும் சுமார் 946 கோடி லிட்டர் தண்ணீரை பயன்படுத்தி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அமேசான் நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள அமெரிக்காவின் சியாட்டில் நகரம் பயன்படுத்தும் ஓராண்டு தண்ணீர் பயன்பாட்டு அளவில் இது வெறும் 5% தான் என்றும் தெரிவித்துள்ளது.
அமேசான் நிறுவனம் விளக்கம்
மேலும் தங்கள் தரவு மையங்களை குளிர்விக்க 90% காற்றை பயன்படுத்துவதாகவும், கோடைக்காலங்களில் மட்டுமே தண்ணீரை பயன்படுத்தி குளிர்விப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அத்துடன் மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்கள் தங்கள் தரவு மையங்களை குளிர்விக்க பயன்படுத்தும் தண்ணீரின் அளவை விட இது மிகவும் குறைவு என்றும் அமேசான் விளக்கமளித்துள்ளது.
டேட்டா சென்டர்கள் எண்ணிக்கை மற்றும் அவற்றை குளிர்விக்க பயன்படுத்தப்படும் தண்ணீர் அளவு, அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த விடயங்கள் உலக அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில் அமேசான் நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

2024ம் ஆண்டு ஒரு கிலோவாட் மணி நேரத்திற்கு கிட்டத்தட்ட 0.15 லிட்டர் குளிர்விக்க பயன்படுத்தப்பட்ட நிலையில் தற்போது அந்த அளவு குறைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.



