இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து – விமானியின் நிலை?

1 Min Read

அசாமில் இந்திய விமானப்படைக்கு (IAF) சொந்தமான விமானம் விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்திய விமானப்படையின் விமானம் விபத்து

அசாமின் ஜோர்ஹட்டில் உள்ள விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படைக்கு (IAF) சொந்தமான AN-32 போக்குவரத்து விமானம் ஒன்று தரையிறங்கும் போது விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து - விமானியின் நிலை? | Iaf An 32 Transport Aircraft Crashes In Assam

இதில், விமானி உயிரிழந்திருப்பார் என அஞ்சப்படுகிறது.

விபத்து நடந்த இடத்தில் தீயணைப்புக் குழுக்கள் பணியாற்றி வருவதாக இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.

சோவியத் யூனியனால் முதலில் தயாரிக்கப்பட்ட இந்த ரக விமானங்களில் சுமார் 100 விமானம் இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்படுகிறது.

AN-32 ஆனது கடுமையான சூழல்களில் சிறந்து விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உயரமான விமான நிலையங்களிலும் வெப்பமான வெப்பமண்டல காலநிலைகளிலும் கச்சிதமாகச் செயல்படுகிறது.

இதனால் 7.5 டன் சரக்கு, 50 பயணிகள் அல்லது 42 வான்குடை வீரர்களை ஏற்றிச் செல்ல முடியும். மேலும், இது தொலைதூரப் பகுதிகளில் பொருட்களை விநியோகம் செய்வதற்காகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *