5 வயது மகள் திடீர் மரணம்: தாய் மீது புகார் கொடுத்த தந்தை! பரபரப்பு சம்பவம்

1 Min Read

பெங்களூருவில் 5 வயது மகள் உயிரிழந்த சம்பவத்தில் தாய் மற்றும் அவரது நண்பர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

குடும்பத்திற்கு ஏற்பட்ட குழப்பம்

கடந்த 2007ம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த பிரியங்கா என்ற பெண்ணுக்கும், தாவணகெரேயைச் சேர்ந்த பிரவீன் என்பவருக்கும்  திருமணம் நடைபெற்றுள்ளது.

இருவருக்கும் 17 வயது மற்றும் 5 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.

5 வயது மகள் திடீர் மரணம்: தாய் மீது புகார் கொடுத்த தந்தை! பரபரப்பு சம்பவம் | 5 Years Old Death In Bengaluru Mother Alleged

இந்நிலையில் தாய் பிரியங்காவிற்கு தனது கல்லூரி நண்பரான மோகன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.இது நாளுக்கு நாள் தீவிரமடையவே கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு அதிகரித்து இருவரும் விவாகரத்து கோரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இருவரும் தனித்தனியாக பிரிந்து பிறகு, அவர்களின் 5 வயது மகள் தாய் பிரியங்காவின் பாதுகாப்பில் மோகனுடன் வசித்து வந்துள்ளார்.

5 வயது சிறுமி உயிரிழப்பு

இந்த நிலையில் மார்ச் 24ம் திகதி 5 வயது சிறுமி வெண்ணிலா உயிரிழந்ததார்.

5 வயது மகள் திடீர் மரணம்: தாய் மீது புகார் கொடுத்த தந்தை! பரபரப்பு சம்பவம் | 5 Years Old Death In Bengaluru Mother Alleged

சிறுமி வெண்ணிலா உயிரிழந்தது தொடர்பாக தாய் முன்னுக்கு பின் முரணான தகவலை கொடுக்கவே, சந்தேகமடைந்த உறவினர்கள் மற்றும் சிறுமியின் தந்தை, வெண்ணிலாவின் பிரேத பரிசோதனை அறிக்கையை வெளிநாட்டில் மருத்துவராக உள்ள தன்னுடைய உறவினருக்கு அனுப்பி விசாரித்துள்ளார்.

அப்போது சிறுமி தாக்கப்பட்டிருக்கலாம் அல்லது மூச்சுத்திணறடிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து தந்தை பிரவீன் காவல்துறையிடம் முறையான புகாரை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தாயின் நண்பர் மோகனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் தாய் பிரியங்கா தலைமறைவாக உள்ள நிலையில் அவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *