பணிக்குத் திரும்பிய மேயர் பிரியா

1 Min Read

கடந்த 20 நாட்களுக்கு மேலாக பணிக்குத் திரும்பாத மேயர் பிரியாராஜன், நீண்ட ஓய்வுக்குப் பின் நேற்று ரிப்பன்மாளிகை வந்து அலுவல் பணியைத் தொடங்கினார்.

திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் பிரியாராஜன், சென்னை மாநகராட்சியின் மேயராக உள்ளார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு முதலமைச்சராக ஆட்சி அமைத்துள்ளார். தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்று 20 நாட்களுக்கு மேலாகியும் சென்னை மாநகராட்சி மேயராக இருக்கும் பிரியா, முதலமைச்சரைச் சந்திக்கவும் இல்லை, பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவும் இல்லை.மேலும் கடந்த 6ஆம் திகதி முதல் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தேர்தல் பணி முடிந்து வழக்கமான பணிக்குத் திரும்பி உள்ளனர். ஆனால், கடந்த 20 நாட்களுக்கு மேலாக பணிக்குத் திரும்பாத மேயர் பிரியாராஜன், நீண்ட ஓய்வுக்குப் பிறகு நேற்று ரிப்பன்மாளிகை வந்து அலுவல் பணியைத் தொடங்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *