தங்கம், வெள்ளி, பிளாட்டினம் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதித்த இந்திய அரசு

1 Min Read

இந்திய அரசு, தங்கம், வெள்ளி, பிளாட்டினம் உள்ளிட்ட அனைத்து வகை ஆபரணங்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் (FTA) தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) வெளியிட்ட அறிவிப்பில், “இறக்குமதி கட்டுப்பாடுகள் உடனடியாக அமுலுக்கு வரும்.

ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தங்கள், Letter of Credit, முன்பணம், கப்பல் அனுப்பும் நிலை போன்றவை எந்தவித சலுகையையும் பெறாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

India gold import restrictions 2026, Silver platinum import curbs India, DGFT notification April 2026, ASEAN FTA misuse India, Precious metals import policy India #GoldImports #SilverImports #PlatinumImports #IndiaEconomy #TradePolicy #DGFT #ASEANFTA

இந்த நடவடிக்கை, Chapter 71-இல் உள்ள அனைத்து பொருட்களுக்கும் பொருந்தும். இதில் இயற்கை மற்றும் செயற்கை முத்துக்கள், விலைமதிப்புள்ள கற்கள், விலைமதிப்புள்ள உலோகங்கள், கவரிங் நகைகள், நாணயங்கள் ஆகியவை அடங்கும்.

சில இறக்குமதியாளர்கள், ASEAN நாடுகளுடன் உள்ள FTA-வை தவறாக பயன்படுத்தி, சுங்கவரி வித்தியாசங்களைச் சுரண்டி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்து “unstudded jewellery” என்ற பெயரில் விலைமதிப்புள்ள உலோகங்களை இறக்குமதி செய்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கு முன்பு, 2025 செப்டம்பரில் வெள்ளி ஆபரணங்களுக்கு, 2025 நவம்பரில் பிளாட்டினம் ஆபரணங்களுக்கு தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இப்போது, அனைத்து வகை தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆபரணங்களுக்கும் முழுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை தவறாக பயன்படுத்துவதைத் தடுக்கும் முயற்சியாகவும், இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் முக்கியமான படியாகவும் பார்க்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *