இந்தியாவில் முதல் முறையாக ரூ 2 லட்சத்தைத் தொட்ட விமான எரிபொருள் விலை

2 Min Read

ஈரான் போருக்கு மத்தியில், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள கடுமையான உயர்வு மற்றும் கணிசமாக உயர்த்தப்பட்ட விமான எரிபொருள் விலைகள் காரணமாக, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானப் பயணம் அதிக செலவு மிக்கதாக மாறக்கூடும்.

இதுவே முதல் முறை

அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள், உள்நாட்டு விமானங்களுக்கான எரிபொருள் விலையை 115 சதவீதம் அளவுக்கும், சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் விலையை 107 சதவீதமாகவும் உயர்த்தியுள்ளன.

இந்தியாவில் முதல் முறையாக ரூ 2 லட்சத்தைத் தொட்ட விமான எரிபொருள் விலை | Atf Price First Time In India

ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சி, விமான நிறுவனங்களின் சிரமங்களை மேலும் மோசமாக்கியுள்ளது. வெளியான தகவலின் அடிப்படையில், டெல்லியில் ஒரு கிலோலிற்றர் (1000 லிற்றர்) விமான எரிபொருளின் விலை கடந்த மாதம் ரூ 96,638.14 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ 207,341.22 ஆக உயர்ந்துள்ளது. இது 114.5 சதவீத உயர்வாகும்.

டெல்லி, கொல்கத்தா மற்றும் சென்னையில் ஒரு கிலோலிற்றர் விமான எரிபொருள் விலை ரூ 200,000-ஐத் தாண்டுவது இதுவே முதல் முறையாகும்.

மும்பையில் இதன் விலை 115 சதவீதம் அதிகரித்து, ரூ 194,968.67-ஐ எட்டியுள்ளது. சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் (ATF) விலை முதல் முறையாக 1,000 டொலரைத் தாண்டியுள்ளது.

டெல்லியில், சர்வதேச விமானங்களுக்கான ஒரு கிலோலிற்றர் எரிபொருள் விலை, கடந்த மாதம் 816.91 டொலலராக இருந்த நிலையில், தற்போது 1,690.81 டொலராக உயர்ந்துள்ளது. இது 107 சதவிகித அதிகரிப்பைக் குறிக்கிறது.

மும்பையிலும் இதேபோன்ற அதிகரிப்பு காணப்பட்டுள்ளது. கொல்கத்தாவில், விலை 855.25 டொலரிலிருந்து 17,273 டொலராக உயர்ந்துள்ளது. 2024 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், சர்வதேச விமானப் பயணங்களுக்கான எரிபொருள் கட்டணங்கள் 900 டொலருக்கு மேல் இருந்தன, ஆனால் அப்போது டொலர்-ரூபாய் பரிமாற்ற விகிதம் 83-84 ஆக இருந்தது.

அசாதாரண சூழ்நிலை

தற்போது, ​​ஒரு டொலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சுமார் 95 ஆக உள்ளது. உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு அதிகபட்ச எரிபொருள் (ATF) விலைகளைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

விமான நிறுவனங்களின் மொத்த இயக்கச் செலவுகளில் 40 முதல் 45 சதவீதம் விமான எரிபொருளுக்காகச் செலவிடப்படுகிறது. இன்றைய விலை உயர்வு சிரமங்களை மேலும் அதிகப்படுத்துவதோடு, சிறிய விமான நிறுவனங்களில் செயல்பாடுகளையும் கடினமாக்கக்கூடும்.

இந்தியாவில் முதல் முறையாக ரூ 2 லட்சத்தைத் தொட்ட விமான எரிபொருள் விலை | Atf Price First Time In India

விமான நிறுவனங்கள் இந்த அதிகரித்த சுமையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தக்கூடும். இது தேவையைப் பாதிப்பதுடன், விமானச் செயல்பாடுகளின் குறைப்புக்கும் வழிவகுக்கலாம்.

ஈரான் மீதான போரால் ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பெருமளவு ஸ்தம்பித்துள்ளதாலும், உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் நிலவும் அசாதாரண சூழ்நிலையாலும், ஏப்ரல் 1 முதல் உள்நாட்டு சந்தையில் ATF விலைகள் 100 சதவீதத்திற்கும் மேல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *