வளைகுடா நாடுகளில் உள்ள முக்கிய எரிசக்தி நிலையங்களை ஈரான் தாக்கியதால், உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் திடீரென உயர்ந்துள்ளன.
கத்தாரின் Ras Laffan LNG நிலையம் ட்ரோன் தாக்குதலால் மூடப்பட்டதால், உலகளாவிய LNG விநியோகத்தில் பெரிய தடைகள் ஏற்பட்டுள்ளன.
Brent crude விலை 114 அமெரிக்க டொலர் வரை உயர்ந்துள்ளது. அதேபோல், அமெரிக்க crude விலை 96.45 டொலராக உயர்ந்துள்ளது.
ஐரோப்பிய எரிவாயு சந்தையில் Dutch TTF contract 35 சதவீதம் வரை உயர்ந்து 74 யூரோவை எட்டியது. ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால், கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குவைத் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் தாக்கப்பட்டதால், பாரசீக வளைகுடா எரிசக்தி வலையமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகளாவிய பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
ஆசிய பங்குச் சந்தைகள் கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளன. ஜப்பான் Nikkei 225 3.4 சதவீதம் மற்றும் இந்திய Sensex 2.3 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளன. அமெரிக்க சந்தைகளும் பணவீக்கம் மற்றும் வட்டி விகிதக் கவலைகளால் வீழ்ச்சி கண்டுள்ளன.
அமெரிக்க டொலர் வலுவடைந்துள்ள நிலையில், இந்திய ரூபாய் 93.36 வரை சரிந்துள்ளது. நிபுணர்கள், இந்த எரிசக்தி அதிர்ச்சி நீண்டகாலம் நீடித்தால், உலக பொருளாதாரம் கடுமையான சவால்களை எதிர்கொள்ளும் என எச்சரிக்கின்றனர்.




