வெசாக் பண்டிகைக் காலமான மே 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களில் மாத்திரம் நாடு முழுவதும் இடம்பெற்ற 19 வீதி விபத்துக்களில் 24 பேர் உயிரிழந்துள்ளதாகப் போக்குவரத்துப் பாதுகாப்பு பிரிவு பிரதி பொலிஸ் மா அதிபர் டப்ளியூ.பீ.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கமளிக்கும்போதே போதே அவர் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார். குறித்த இரு தினங்களில் பதிவான ஒட்டுமொத்த விபத்துக்களில் கடந்த இரு நாட்களில், 19 வீதி விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இவற்றில், 24 பேர்
உயிரிழந்துள்ளனர்.இக்காலப்பகுதியில் 29 கடுமையான விபத்துக்களும், 96 சிறிய விபத்துக்களும், 19 பொருட் சேத விபத்துக்களும் இடம் பெற்றுள்ளன.இந்த வீதி விபத்துக்களுடன் தொடர்புடைய வாகனங்களில் சைக்கிள்களே அதிகளவில் விபத்துக்குள்ளாகியுள்ளன. மோட்டார் சைக்கிள்கள் 15, முச்சக்கரவண்டிகள் 03, லொறிகள் 02, தனியார் பஸ்கள் 02, கெப் ரக வாகனங்கள் 01 என்பன விபத்துக்குள்ளாகியுள்ளன. உயிரிழந்த 24 பேரில் அதிகளவானோர் வீதியில் நடந்து சென்ற பாதசாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.



