சுங்கத் திணைக்களம், தனது மே மாதத்திற்கான வருமான இலக்கை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க, குறித்த திணைக்களம் 190,947 மில்லியன் ரூபாயை வருமானமாகப் பெற்றுக்கொண்டுள்ளது.
சுங்கத் திணைக்களத்தின் மே மாதத்திற்கான வருமான இலக்கு 187,801 மில்லியன் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த மாதத்தின் முதல் 25 தினங்களிலேயே 190,947 மில்லியன் ரூபாயை வருமானமாக ஈட்டிக்கொள்ள முடிந்துள்ளதாக அந்தத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.



