நீர் கட்டணங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். அந்த வகையில் நீர்க் கட்டணம் தொடர்பான மீளாய்வை எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.



