தெற்கு லெபனானில் உள்ள 12 நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ள இஸ்ரேல், குடியிருப்பாளர்களைத் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.
அந்த நகரங்கள் மற்றும் கிராமங்கள்: அல்-துவைர், அரப் சலீம், அல்-ஷர்கியா (நபாத்தியா), ஜிப்ஷித், பிராஷிட், சரஃபந்த், தௌனின், ப்ரிகா, காக்கையா அல்-ஜிஸ்ர், அல்-கசிபா (நபாத்தியா), கஃபார் சிர்.
குடியிருப்பாளர்கள் தங்கள் நகரங்கள் மற்றும் கிராமங்களிலிருந்து குறைந்தபட்சம் 1,000 மீற்றர் தொலைவில் உள்ள திறந்தவெளிப் பகுதிகளுக்குச் செல்லுமாறு இஸ்ரேல் இராணுவம் அறிவுறுத்தியுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக முன்னெடுக்கும் நடவடிக்கையே இதுவெ அந்நாட்டு இராணுவம் குறிப்பிட்டுள்ளது.



