காஞ்சிபுரம் நெல்லுக்கார தெருவில் சித்திரகுப்தருக்காக தனியாக அமைந்துள்ள கோயில் உள்ளது.
இந்த கோயில் 9ஆம் நூற்றாண்டில் இடைக்கால சோழர்களால் கட்டப்பட்டது என கூறப்படுகிறது.
கோயிலின் ஒரு பக்கத்தில் இராமலிங்கனார் சன்னதி மற்றும் மற்றொரு பக்கத்தில் விநாயகர் சன்னதி உள்ளது. இந்த கோயில் கேது பரிகாரத் தலமாகவும் பிரசித்தி பெற்றது.
சித்திரா பௌர்ணமி நாளில் இங்கு நடக்கும் மிகப்பெரிய திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்கிறார்கள்.
இந்த கோயிலில் மூன்று அடுக்குகள் கொண்ட ராஜகோபுரம் உள்ளது.
கோயிலின் உள்ளே சித்திரகுப்தர் எழுத்தாணி மற்றும் பனையோலை உடன் அமர்ந்திருக்கும் சிலை உள்ளது. அவருடன் கர்ணிக்காம்பாள் சன்னதியும் உள்ளது.

இந்து நம்பிக்கையின்படி, சித்திரகுப்தர் எமதர்மன்க்கு கணக்காளராக இருந்து மனிதர்களின் பாவ புண்ணிய கணக்குகளை பதிவு செய்கிறார்.
ஒவ்வொரு அமாவாசை நாளிலும் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
குறிப்பாக ஏப்ரல் மாத சித்திரா பௌர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.



