லிட்ரோ எரிவாயு எதிர்வரும் மே மாதத்திலும் தடையின்றி விநியோகிக்கப்படுமென லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.ஏற்கனவே,20,500 மெட்ரிக் தொன் எரிவாயு கிடைத்துள்ளதாகவும், மேலும் 17,500 மெட்ரிக் தொன் எரிவாயு நாட்டுக்கு வரவுள்ளதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.இந்த எரிவாயு கையிருப்புகள் தற்போது மாலைதீவில் உள்ள மிதக்கும் களஞ்சியசாலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

தட்டுப்பாடுகளின் எரிவாயுக்களை விநியோகிக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கிணங்க மேலும் 20,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் தென்னாபிரிக்கா ஊடாக மாலைதீவை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலத்தின் பின்னரும் சந்தைக்குத் தேவையான எரிவாயுவை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.ஏப்ரல் 16 ஆம் திகதி முதல் எரிவாயு சிலிண்டர் நிரப்பும் பணிகள் மற்றும் விநியோக நடவடிக்கைகள் மீண்டும் வழமை போல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.



