அமெரிக்காவின் KC 135 என்ற எரிபொருள் நிரப்பு விமானம் விபத்துக்குள்ளானதை கூறப்பட்ட நிலையில், அதனை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ஆதரவு அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
நொறுங்கி விழுந்த KC 135 விமானம்
ஈரானுக்கு எதிராக நடைபெற்று வரும் ஆபரேஷன் epic fury நடவடிக்கையில், சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவிற்கு சொந்தமான 3 F-15 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இதன் பின்னர்,எதிரி நாடு விமானம் என நினைத்த குவைத் தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்தது.

இந்நிலையில், ஆபரேஷன் epic fury நடவடிக்கையில் இன்று 4வதாக ஒரு விமானத்தை அமெரிக்கா இழந்துள்ளது.
இந்நினையில், அமெரிக்காவிற்கு சொந்தமான KC 135 என்ற எரிபொருள் நிரப்பு விமானம் இன்று ஈராக்கின் மேற்கு எல்லையில் விபத்துக்குள்ளானதாகவும், ஆனால் அது விரோதமான அல்லது நட்பு ரீதியான துப்பாக்கிச் சூடு காரணம் கிடையாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த மற்றொரு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாக அமெரிக்காவின் Centcom தெரிவித்துள்ளது.
KC-135 விமானங்கள் வழக்கமாக ஒரு விமானி, ஒரு துணை விமானி மற்றும் ஒரு பூம் ஆபரேட்டர் கொண்ட குழுவைக் கொண்டிருக்கும்.
அந்த குழுவினருக்கு என்ன ஆனது என்பது குறித்த விவரம் வெளியாகவில்லை.
ஈரான் ஆதரவு அமைப்பு பொறுப்பேற்பு
ஆனால், இந்த விமானத்தை தங்களுடைய வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக ஈராக்கில் இருந்து இயங்கும் ஈரான் ஆதரவு இஸ்லாமிய எதிர்ப்பு என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

“நமது நாட்டின் இறையாண்மை மற்றும் வான்வெளியைப் பாதுகாப்பதற்காக” விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும், விமானத்தில் இருந்த 6 பேரும் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த C -135 ஸ்ட்ராடோடேங்கர் என்பது முக்கியமாக வான்வழி எரிபொருள் நிரப்புவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு இராணுவ விமானமாகும்.

நீண்ட தூர பரப்பில் ஈடுபடும் போர் விமானங்கள் உள்ளிட்டவற்றிற்கு நடுவானில் பறக்கும் போதே எரிபொருளை மாற்றும்.
இது எரிபொருளை மாற்றுவதற்கு மட்டுமல்லாமல், சரக்குகளை ஏற்றிச் செல்லவும், காயமடைந்த அல்லது நோய்வாய்ப்பட்ட நோயாளிகளை வெளியேறுவது உள்ளிட்ட வான்வழி மருத்துவ வெளியேற்றப் பணிகளை ஆதரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
இதில், சுமார் 37,600 கிலோ சரக்குகளை அல்லது பல டஜன் பயணிகளை கொண்டு செல்ல முடியும்.




