மார்ச் 1 முதல் WhatsApp செயலியில் பெரிய மாற்றம்- SIM Binding கட்டாயம்

1 Min Read

இந்தியாவில் WhatsApp செயலியில் மார்ச் 1, 2026 முதல் முக்கியமான மாற்றம் அமுலுக்கு வருகிறது.

தொலைத்தொடர்பு துறை (DoT), Telecom Cyber Security Rules 2024 அடிப்படையில், SIM Binding முறையை கட்டாயமாக்கியுள்ளது.

இதன் படி, WhatsApp கணக்கு, பயனரின் முதன்மை மொபைலில் உள்ள அதே SIM கார்டுடன் தொடர்ந்து இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

WhatsApp, ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் SIM கார்டு உண்மையில் மொபைலில் உள்ளதா என சரிபார்க்கும்.

WhatsApp SIM binding India, WhatsApp March 1 update, WhatsApp Web logout rule, DoT Telecom Cyber Security Rules, WhatsApp multi-device restriction, WhatsApp SIM verification #WhatsAppUpdate #SIMBinding #CyberSecurity #IndiaTech #DoTRules #WhatsAppNews #DigitalSafety

இதனால், WhatsApp Web, Desktop App, Tablet, Secondary Phone போன்ற சாதனங்களில் WhatsApp பயன்படுத்தும் பயனர்களுக்கு சிரமம் ஏற்படும்.

SIM கார்டு நீக்கப்பட்டாலோ, மாற்றப்பட்டாலோ, WhatsApp உடனடியாக செயலிழக்கும். மீண்டும் பயன்படுத்த, அசல் SIM கார்டை மொபைலில் reinsert செய்து re-verification செய்ய வேண்டும்.

அரசு, இந்த நடவடிக்கை தேசிய பாதுகாப்பு மற்றும் சைபர் மோசடிகளைத் தடுக்கும் நோக்கில் எடுக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளது.

2024-ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் சைபர் மோசடிகளால் ரூ.22,800 கோடி இழப்பு ஏற்பட்டதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.

WhatsApp, சில பயனர்களுக்கு ஏற்கனவே “Due to regulatory requirements in India, WhatsApp needs to check that your SIM card is in your phone” என்ற அறிவிப்பை அனுப்பத் தொடங்கியுள்ளது.

அதாவது, இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள விதிசார்ந்த தேவைகள் காரணமாக, உங்கள் சிம்கார்டு உங்கள் தொலைபேசியில் இருக்கிறதா என்று வாட்ஸ்அப்பால் சரிபார்க்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.

பயனர்கள், தங்கள் WhatsApp கணக்கு தற்போது பயன்படுத்தும் SIM கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், App-ஐ புதிய version-க்கு update செய்து, Web அல்லது Desktop பயன்பாட்டின் போது முதன்மை மொபைலை அருகில் வைத்திருக்க வேண்டும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *