தந்தையின் உடலை துண்டு துண்டாக வெட்டிய மகன்: நேரில் பார்த்த சகோதரி

1 Min Read

லக்னோவில் தந்தையின் உடலை துண்டு துண்டாக வெட்டிய 21 வயது மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தை – மகன் மோதல்

லக்னோவின் ஆஷியானா பகுதியை சேர்ந்த 49 வயது மன்வேந்திர சிங் என்பவர் மருந்து மற்றும் மதுபான தொழிலில் வெற்றிகரமாக ஈடுபட்டு வந்துள்ளார்.

அவருக்கு தன்னுடைய மகன் அக்ஷத் பிரதாப் சிங், மருத்துவ துறையில் நடைபெறும் நுழைவு தேர்வுகளுக்கு தயாராக வேண்டும் என்று விரும்பியுள்ளார்.

தந்தையின் உடலை துண்டு துண்டாக வெட்டிய மகன்: நேரில் பார்த்த சகோதரி | Son Arrested For Killed His Father In Lucknow

ஆனால் இதில்  மகன் அக்ஷத் பிரதாப் சிங்கிற்கு சிறிதும் விருப்பம் இல்லாததால், தந்தைக்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் மற்றும் மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.

காணாமல் போன தந்தை

இந்நிலையில் கடந்த சில தினங்களாக தந்தை மன்வேந்திர சிங் காணாமல் போயுள்ளார்.

இதையடுத்து விசாரணையை தொடங்கிய பொலிஸார், தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடைபெற்று வந்த மோதலை கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் கடந்த வெள்ளிக்கிழமை தந்தைக்கும் மகனுக்கும் மோதல் மீண்டும் மோதல் ஏற்பட்டதையும், அப்போது தந்தையை மகன் அக்ஷத் பிரதாப் சிங் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

உடலை மறைக்க திட்டம்

தந்தையின் உடலை துண்டு துண்டாக வெட்டிய மகன்: நேரில் பார்த்த சகோதரி | Son Arrested For Killed His Father In Lucknow

மகன் அக்ஷத் பிரதாப் சிங் கொலை செய்யப்பட்ட தந்தையின் உடலை மறைக்க அதை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் கட்டி சிலவற்றை சதாருணா அருகே வீசியுள்ளார்.

முக்கிய மார்பு பகுதியை மட்டும் வீட்டில் இருந்த நீல நிற பேரலில் அக்ஷத் பிரதாப் சிங் மறைத்து வைத்துள்ளார்.

அக்ஷத் பிரதாப் சிங் தந்தையின் உடலை வெட்டும் போது அவரது சகோதரி நேரில் பார்த்த நிலையில், சகோதரியை மிரட்டி அடிபணிய வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது நடவடிக்கைக்கு பிறகு அக்ஷத் பிரதாப் சிங்கிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர் கொலை குற்றத்தை ஒப்புக் கொண்டு இருப்பதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *