ரஷ்ய எண்ணெய் கொள்முதலைக் குறைத்த இந்தியா… சீனாவுக்கு அடித்த ஜாக்பாட்

2 Min Read

அமெரிக்க அழுத்தம் காரணமாக ரஷ்ய எண்ணெய் கொள்முதலை இந்தியா குறைத்துள்ள நிலையில், அதை நல்வாய்ப்பாகப் பயன்படுத்திய சீனா, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை அதிகரித்துள்ளது.

அதிக அளவுக்கு இறக்குமதி

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், சீனா ரஷ்யாவின் யூரல்ஸ் கச்சா எண்ணெயை கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளில் இல்லாத அதிக அளவுக்கு இறக்குமதி செய்து வருகிறது.

ரஷ்ய எண்ணெய் கொள்முதலைக் குறைத்த இந்தியா... சீனாவுக்கு அடித்த ஜாக்பாட் | China Purchasing Crude Oil

மட்டுமின்றி, ஈரானிய எண்ணெயை விடவும் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் சீனாவுக்கு வழங்கப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழுத்தம் மற்றும் ரஷ்ய எண்ணெய் உற்பத்தியாளர்கள் மீது விதிக்கப்பட்ட கடுமையான மேற்கத்தியத் தடைகள் காரணமாக, இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் டிசம்பர் மாதத்தில் ரஷ்ய எண்ணெயை வாங்குவதைக் குறைத்துக்கொண்டு, மாற்று வழிகளைத் தேடத் தொடங்கின.

இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதியாளரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஜனவரி மாதம் முதல் ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்திவிட்டது.

ரிலையன்ஸ் நிறுவனம் ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் எண்ணெய் வாங்கி, அதை சுத்திகரித்து ஐரோப்பாவிற்கு விற்பனை செய்கிறது. இந்த நிலையில், இந்தியா ரஷ்ய எண்ணெய்க்கான தனது தேவையை குறைத்த பிறகு, சீனா பெரும் பயனைப் பெற்று வருகிறது.

மட்டுமின்றி, சீனா தற்போது ரஷ்ய கச்சா எண்ணெயை மலிவான விலையில் பெற்று வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா வெனிசுலா மீது தடைகளை விதித்து, அந்நாட்டிலிருந்து எண்ணெய் விற்பனைக்குக் கட்டுப்பாடுகளை விதித்ததால்,

சீனாவிற்கு வெனிசுலாவிலிருந்து வரும் எண்ணெய் இறக்குமதி குறைந்தது. கேப்லர் என்ற பகுப்பாய்வு நிறுவனத்தின் தரவுகளின்படி, சீனா தற்போது ரஷ்யாவின் யூரல்ஸ் கச்சா எண்ணெயை ஒரு நாளைக்கு சுமார் 405,000 பீப்பாய்கள் இறக்குமதி செய்கிறது.

கடல்வழி இறக்குமதி

ஜனவரி மாதம், ஜூன் 2023 முதல் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த அளவை எட்டியுள்ளது. சீனா கடல் வழிகள் வழியாக ஒரு நாளைக்கு சுமார் 1.4 மில்லியன் பீப்பாய் ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்கிறது.

மற்றொரு தரவு நிறுவனமான வோர்டெக்சாவின்படி, ரஷ்ய கச்சா எண்ணெயின் சீனாவின் கடல்வழி இறக்குமதி ஒரு நாளைக்கு 1.5 மில்லியன் பீப்பாய்களைத் தாண்டியுள்ளது.

இது, 2025 ஆம் ஆண்டின் முதல் பதினொரு மாதங்களில் பதிவு செய்யப்பட்ட ஒரு நாளைக்கு 1.2 மில்லியன் பீப்பாய்கள் என்ற சராசரியை விட கணிசமாக அதிகமாகும்.

ரஷ்ய எண்ணெய் கொள்முதலைக் குறைத்த இந்தியா... சீனாவுக்கு அடித்த ஜாக்பாட் | China Purchasing Crude Oil

கெப்லர் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் உரால்ஸ் கச்சா எண்ணெய் இறக்குமதி ஒரு நாளைக்கு 929,000 பீப்பாய்களாகக் குறைந்துள்ளது.

இது டிசம்பர் 2022-க்குப் பிறகு மிகக் குறைந்த அளவாகும். 2024-ல் சராசரியாக ஒரு நாளைக்கு 1.36 மில்லியன் பீப்பாய்களாக இருந்தது, அதே சமயம் 2025-ல் இது ஒரு நாளைக்கு சுமார் 1.27 மில்லியன் பீப்பாய்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *