100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் காரை அறிமுகம் செய்யும் மாருதி சுசூகி

1 Min Read

இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி நிறுவனம், 100 சதவீதம் எத்தனால் (E100) எரிபொருளில் இயங்கக்கூடிய புதிய Flex-Fuel காரை ஜூன் 5, 2026 அன்று அறிமுகப்படுத்த உள்ளது.

இதனை, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

இந்த கார், பிரபலமான WagonR மாடலில் Flex-Fuel பதிப்பாக வெளியிடப்படுகிறது.

உலக சுற்றுச்சூழல் தினத்தன்று அறிமுகமாகும் இந்த கார், இந்தியாவில் முதல் முறையாக 100 சதவீதம் எத்தனால் பயன்படுத்தும் வாகனமாகும்.

Maruti Suzuki Flex-Fuel Car, WagonR Ethanol Car Launch, 100 Percent Ethanol Car India, Nitin Gadkari Ethanol Vehicle, Flex-Fuel Cars in India, Maruti Suzuki Environment Day Launch #MarutiSuzuki #FlexFuel #EthanolCar #WagonR #NitinGadkari #EnvironmentDay #GreenEnergy #SustainableMobility

ஏப்ரல் மாதத்தில், சாலை போக்குவரத்து அமைச்சகம் E100 எரிபொருளை சோதனை மற்றும் சான்றிதழ் விதிகளில் சேர்த்தது. இதனால், தூய எத்தனால் வாகனங்கள் அறிமுகம் பெற வழி திறந்தது.

மாருதி சுசூகி நிறுவனத்தின் அதிகாரிகள், “Flex-Fuel வாகனங்கள் உடனடியாக அதிக விற்பனை பெறாது. எத்தனால் எரிபொருள் நிலையங்கள் நாடு முழுவதும் உருவாக சில காலம் பிடிக்கும். அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் மட்டுமே இது பெரிய அளவில் வளர்ச்சி பெறும்” என தெரிவித்துள்ளனர்.

Maruti Suzuki Flex-Fuel Car, WagonR Ethanol Car Launch, 100 Percent Ethanol Car India, Nitin Gadkari Ethanol Vehicle, Flex-Fuel Cars in India, Maruti Suzuki Environment Day Launch #MarutiSuzuki #FlexFuel #EthanolCar #WagonR #NitinGadkari #EnvironmentDay #GreenEnergy #SustainableMobility

வாகனங்களை எத்தனால் எரிபொருளுக்கு மாற்றுவதால் ஆரம்பத்தில் ரூ.40,000 முதல் ரூ50,000 வரை கூடுதல் செலவு ஏற்படும் என மதிப்பிடுகின்றது.

இந்த முயற்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும், எரிபொருள் இறக்குமதியை குறைப்பதற்கும் முக்கியமான படியாக கருதப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *