ஈரான் போரால் எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், நயாரா நிறுவனம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளது.
மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணி ஈரானுக்கு எதிராக நடத்திய தாக்குதலால் உலகளாவிய எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் தாக்கம் இந்தியாவிலும் உணரப்படுகிறது.
இந்தியாவின் மிகப் பெரிய தனியார் எரிபொருள் விற்பனையாளர் நயாரா எரிசக்தி (Nayara Energy), இன்று முதல் (மார்ச் 26) பெட்ரோலுக்கு 5 ரூபாயும் டீசலுக்கு 3 ரூபாயும் விலை உயர்த்தியுள்ளது.
நயாரா நிறுவனம் இந்தியாவில் தற்போது 6,967 பெட்ரோல் பம்புகளை இயக்குகிறது.

அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலளித்த ஈரான், ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதால், கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 119 டொலர் வரை உயர்ந்து, தற்போது 100 டொலருக்கு அருகில் நிலைகொண்டுள்ளது.
இந்தியாவில் அரசு நிறுவங்கள் (IOC, BPC & LHPCL) விலைகளை உயர்த்தாமல் தக்கவைத்துள்ள நிலையில், தனியார் நிறுவனங்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. இதனால், நயாராவிற்கு செலவுகளைக் கட்டுப்படுத்த விலையை உயர்த்தும் நிலைக்கு ஏற்பட்டுள்ளது.
சில மாநிலங்களில், உள்ளூர் வரி (VAT) காரணமாக பெட்ரோல் விலை ரூ.5.30 வரை உயர்ந்துள்ளது. அதேசமயம், அரசு நிறுவங்கள் சாதாரண பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை மாற்றாமல் வைத்துள்ளன. ஆனால், பிரீமியம் பெட்ரோல் விலை மட்டும் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் எரிபொருள் தேவையின் 88 சதவீத கச்சா எண்ணெய் இறக்குமதியை சார்ந்தே உள்ளது. ஹார்முஸ் நீரிணை வழியாகவே பெரும்பாலான கப்பல்கள் கடந்து செல்கின்றன.




