யோஷிதவின் மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி

0 Min Read

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள “சதித்திட்டம்” என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியிருந்த உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி யோஷித ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மறுசீரமைப்பு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (03) அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, இந்த மனுவை விசாரணைக்காக ஜூன் மாதம் 16ஆம் திகதி அழைப்பதற்கும் நீதிமன்றம் திகதி குறித்துள்ளது.

குறித்த மனு இன்று (03) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீண்டநேரம் பரிசீலிக்கப்பட்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *