தமிழ், சிங்கள புத்தாண்டையிட்டு நாளைய தினம் (14) வரை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
மக்களின் தேவை மற்றும் வசதியைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.

எனினும், ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு பின்னர் நீர் வழங்கல் தொடர்பான விடயங்களை ஆய்வு செய்து அடுத்த கட்டம் தொடர்பில் உரிய தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




