ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் தமிழக இடம்.., எது தெரியுமா?

1 Min Read

ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடு, சேலம் அருகே கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள முக்கிய மலைவாசஸ்தலமாகும்.

சேர்வராயன் மலைத்தொடரின் ஒரு பகுதியாக உள்ள இது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 1515 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

பசுமையான மலைகள், காப்பித் தோட்டங்கள் மற்றும் இதமான காலநிலை காரணமாக சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் தமிழக இடம்.., எது தெரியுமா? | Which Place In Tn Is Known As Ooty Of The Poor

சேலத்திலிருந்து ஏற்காட்டிற்கு எளிதாக பேருந்து வசதிகள் உள்ளன.

ஆண்டுதோறும் கோடை காலத்தில் நடைபெறும் விழாவில் மலர் கண்காட்சி, நாய் கண்காட்சி, மூலிகை கண்காட்சி மற்றும் படகு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதனை காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் தமிழக இடம்.., எது தெரியுமா? | Which Place In Tn Is Known As Ooty Of The Poor

ஏற்காட்டில் மரகத ஏரி, லேடிஸ் சீட், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில், கிள்ளியூர் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல முக்கிய சுற்றுலா தலங்கள் உள்ளன.

மேலும் அண்ணா பூங்கா, மான் பூங்கா, ஜப்பானிய பூங்கா போன்ற இடங்களும் பயணிகளை கவர்கின்றன.

இதை ஒட்டி பக்கோடா காட்சி முனை மற்றும் பிரமிடு பாயிண்ட் போன்ற இடங்களிலும் சுற்றுலா பயணிகள் அதிகம் செல்கின்றனர்.

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் தமிழக இடம்.., எது தெரியுமா? | Which Place In Tn Is Known As Ooty Of The Poor

சிறந்த தங்கும் வசதிகள், உணவகங்கள் மற்றும் குறைந்த செலவில் பயணம் செய்யும் வாய்ப்பு இருப்பதால், ஏற்காடு பொதுமக்களுக்கு ஏற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது.

இதனால் தான் இது ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படுகிறது.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் குளிர்ச்சியான பகுதிகளை தேடிய ஆங்கிலேயர்கள் ஏற்காட்டை கண்டறிந்து, பின்னர் சாலைகள் மற்றும் குடியிருப்புகளை அமைத்ததாக கூறப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *