அடுத்த குறி தப்பாது… ஈரானின் கார்க் தீவுகள் மீதான தாக்குதலுக்குப் பிறகு ட்ரம்ப் மிரட்டல்

2 Min Read

ஈரானின் கார்க் தீவுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதைப் பெருமையாகப் பேசிய டொனால்ட் ட்ரம்ப், அடுத்த குறி தப்பாது எனவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

ஈரானின் மணிமகுடம்

ஆனால், தீவின் எண்ணெய் கட்டமைப்பு மீது தொட நினைத்தால், மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த குறி தப்பாது... ஈரானின் கார்க் தீவுகள் மீதான தாக்குதலுக்குப் பிறகு ட்ரம்ப் மிரட்டல் | Trump Hails Dramatic Bombing

வெள்ளிக்கிழமை மாலையில், தனது ட்ரூத் சமூக ஊடகப்பக்கத்தில் இட்ட ஒரு பதிவில், ஜனாதிபதி ட்ரம்ப் அந்தத் தீர்க்கமான தாக்குதல் குறித்துப் பெருமை பேசினார்.

மத்திய கிழக்கு வரலாற்றிலேயே இப்படியான ஒரு தாக்குதல் முன்னெடுக்கப்படவில்லை என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஈரானின் மணிமகுடமாகத் திகழும் கார்க் தீவிலுள்ள ஒவ்வொரு இராணுவ இலக்கையும் முற்றிலுமாக அழித்தொழித்து விட்டதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், நாகரிகம் கருதி, அந்தத் தீவின் எண்ணெய் உள்கட்டமைப்புகளைத் தாக்கவில்லை; எனினும், ஈரான் ஏதேனும் தவறான நடவடிக்கையை மேற்கொண்டால், அத்தகைய தாக்குதல் சாத்தியமற்றதல்ல என்றும் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும், ஈரான் அல்லது எவரேனும் ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் தடையின்றியும் பாதுகாப்பாகவும் செல்வதற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஏதேனும் செய்யப்பட்டால், உடனடியாக இந்த முடிவை மறுபரிசீலனை செய்வேன் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த குறி தப்பாது... ஈரானின் கார்க் தீவுகள் மீதான தாக்குதலுக்குப் பிறகு ட்ரம்ப் மிரட்டல் | Trump Hails Dramatic Bombing

கார்க் தீவின் மீதான தாக்குதலை அடுத்து உடனடியாக பதிலளித்த ஈரான் இராணுவம், அமெரிக்காவுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்குச் சொந்தமான எண்ணெய் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் உடனடியாக அழிக்கப்பட்டு, சாம்பல் மேடாக மாற்றப்படும் என எச்சரித்துள்ளது.

அனைத்துக் கட்டுப்பாடுகளையும்

இதனிடையே, கார்க் தீவுகள் மீதான தாக்குதல் ஈரான் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் கைவிட வழிவகுக்கும் என நாடாளுமன்ற சபாநாயகர் Mohammad Bagher Qalibaf எச்சரித்துள்ளார்.

அடுத்த குறி தப்பாது... ஈரானின் கார்க் தீவுகள் மீதான தாக்குதலுக்குப் பிறகு ட்ரம்ப் மிரட்டல் | Trump Hails Dramatic Bombing

கார்க் தீவின் 12 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானின் கடற்பகுதியிலிருந்து சுமார் 21 மைல் தொலைவில் அமைந்துள்ள அந்தச் சிறிய பவளத் தீவு, ஈரானின் ஏறக்குறைய அனைத்து எண்ணெய் ஏற்றுமதிகளும் முன்னெடுக்கப்படும் முதன்மையான முனையமாகும்.

போர் தொடங்கியதிலிருந்து ஈரான் இதுவரை 13.7 மில்லியன் பீப்பாய்களை ஏற்றுமதி செய்துள்ளது. ஈரான் தனது ஆண்டு வருவாயான 78 பில்லியன் டொலரில் கணிசமான பங்கை எண்ணெயிலிருந்து பெறுகிறது; இந்த எண்ணெய் ஏற்றுமதிகள் சீனா போன்ற நாடுகளுக்கு முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த குறி தப்பாது... ஈரானின் கார்க் தீவுகள் மீதான தாக்குதலுக்குப் பிறகு ட்ரம்ப் மிரட்டல் | Trump Hails Dramatic Bombing

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *