உலகக் கிண்ணம்… ஈரான் கால்பந்து அணிக்கு டொனால்ட் ட்ரம்ப் விடுத்த கடும் எச்சரிக்கை

1 Min Read

ஈரான் கால்பந்து அணி, தங்கள் உயிருக்கும் பாதுகாப்புக்கும் வேண்டி உலகக் கிண்ணம் போட்டிகளிலிருந்து விலகியிருக்குமாறு டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

அவர்களின் உயிருக்கு

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளால் கால்பந்து உலகக் கிண்ணம் இணைந்து நடத்தப்படுகிறது. இதில் தகுதி பெற்றுள்ள ஈரான், போர் காரணமாக ஆட்டங்களில் கலந்துகொள்ளுமா என்ற கேள்வியும் எழுந்தது.

உலகக் கிண்ணம்... ஈரான் கால்பந்து அணிக்கு டொனால்ட் ட்ரம்ப் விடுத்த கடும் எச்சரிக்கை | Trump Warning Iran Soccer Team

இந்த நிலையில், தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், ஈரான் தேசிய கால்பந்து அணியை உலகக் கிண்ணம் தொடருக்கு வரவேற்கிறோம்; ஆனால், அவர்களின் சொந்த உயிருக்கும் பாதுகாப்புக்கும் கருதிப் பார்க்கையில், அவர்கள் அங்கு இருப்பது பொருத்தமானது என்று நான் உண்மையில் கருதவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ஈரானின் விளையாட்டுத்துறை அமைச்சர் ஏற்கனவே உலகக் கிண்ணம் போட்டிகளைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்தார். ட்ரம்பிடம் இந்த விவகாரம் குறித்து கடந்த வாரம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், எனக்கு அதைப் பற்றிச் சிறிதும் கவலையில்லை என பதிலளித்திருந்தார்.

உலகக் கிண்ணம் போட்டிகள் எதிர்வரும் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெறும். ஈரான் அணி, ஜூன் 15 மற்றும் 21 ஆகிய திகதிகளில் லாஸ் ஏஞ்சல்ஸில் நியூசிலாந்து மற்றும் பெல்ஜியத்தை எதிர்கொள்ள உள்ளது.

உலகக் கிண்ணம்... ஈரான் கால்பந்து அணிக்கு டொனால்ட் ட்ரம்ப் விடுத்த கடும் எச்சரிக்கை | Trump Warning Iran Soccer Team

அத்துடன் ஜூன் 26 அன்று சியாட்டிலில் எகிப்து அணியை எதிர்கொள்கிறது. தற்போது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு இராணுவ நடவடிக்கைகளால், ஈரான் அணி போட்டிகளைப் புறக்கணித்துள்ளதாகவே அறிவித்துள்ளது.

ஈரான் அணி புறக்கணித்ததாக அறிவித்துள்ள நிலையிலேயே, அவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமில்லை என தற்போது ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *