பிரித்தானிய விமான தளத்தில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்களில் அதிபயங்கர குண்டுகள் நிரப்பப்பட்டு வருகின்றன.
பிரித்தானியாவில் உள்ள Fairford விமான தளத்தில் அமெரிக்க இராணுவத்தின் B-1 Lancer Bomber விமானங்களில் bunker-busting JDAM குண்டுகள் ஏற்றப்படுவதை Al Jazeera செய்தி குழு நேரடியாக பதிவு செய்துள்ளது.
இந்த குண்டுகள், ஈரானுக்கு எதிரான தாக்குதல்களில் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த காட்சிகள் வெளிவந்ததன் பின்னர், பிரித்தானிய அரசு ஈரான் போரில் எவ்வாறு பங்கேற்கிறது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணி ஈரானுக்கு எதிராக நடத்தும் தாக்குதல்களில், பிரித்தானியா தனது இராணுவ தளங்களை வழங்குகிறதா என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது.
ஈரான் போரின் தாக்கம் உலகளாவிய அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல், பெய்ரூட் நகரின் கடற்கரை பகுதிகளை குண்டுவீசி 8 பேரை கொன்று, 31 பேரை காயப்படுத்தியுள்ளது. அதேசமயம், துபாயில் ட்ரோன் தாக்குதலால் உயரமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

இந்த சம்பவங்கள், மத்திய கிழக்கு பகுதியில் போர் சூழ்நிலை மேலும் தீவிரமடைந்துள்ளதாகக் காட்டுகின்றன.
உலகளாவிய அரசியல் வட்டாரங்களில், “பிரித்தானிய அரசு தனது இராணுவ தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதித்துள்ளதா?” என்ற கேள்வி பெரும் விவாதமாகியுள்ளது.




