மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் நிறுத்தம்: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிவிப்பு

1 Min Read

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி 12ம் திகதி மற்றும் 13ம் திகதிகளில் கொழும்பு மற்றும் துபாய் இடையிலான சிறிய ரக விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் நிறுத்தம்: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிவிப்பு | Srilanka Airlines Flight Cancelled For Middle East

இதன் மூலம் துபாயிலிருந்து கொழுப்புக்கு பறக்கும் UL232 ஆகிய விமானமும், கொழும்பிலிருந்து துபாய் நோக்கி செல்லும் UL231 விமானமும் இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய அறிவிப்பால் பாதிப்பு உள்ளாகியுள்ள பயணிகள் உடனடியாக தங்கள் விமான பயண நிலை குறித்து அறிந்து கொள்ள www.srilankan.com என்ற இணையதளத்தைப் பார்வையிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் நிறுத்தம்: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிவிப்பு | Srilanka Airlines Flight Cancelled For Middle East

மேலும் கூடுதல் உதவிகள் தேவைப்படும் பயணிகள் 1979 என்ற எண்ணுக்கும், சர்வதேச ரீதியாக +94 11 777 1979 என்ற எண் வழியாகவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை தொடர்பு கொண்டு விவரங்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தங்களுக்கு அருகிலுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் அல்லது பயண முகவர்களையும் அணுகி தகவல்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *