தங்கம் மனித வரலாற்றில் பல நகரங்கள், பொருளாதாரங்கள், பேரரசுகளை உருவாக்கிய முக்கியமான வளமாக இருந்து வருகிறது.
உலகின் 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட தங்கத்தை உற்பத்தி செய்த இடம், இன்றும் அங்கு தங்கம் வெட்டியெடுக்கப்படுகிறது. அது தான் தென்னாப்பிரிக்காவின் ஜொஹானஸ்பர்க் நகரம்.
ஜொஹானஸ்பர்க் உலகின் தங்க தலைநகரம் என்ற பட்டத்தை கோருகிறது.
1886-ஆம் ஆண்டு Langlaagte Farm பகுதியில் George Harrison கண்டுபிடித்த தங்கக் களஞ்சியத்தால், ஜொஹானஸ்பர்க் ‘eGoli’ (Place of Gold) என அழைக்கப்பட்டது.

இதனால் அந்த இடம் பல ஆயிரக்கணக்கானோரை அங்கு ஈர்த்தது. சாலைகள், ரயில்கள், நகரங்கள் உருவாகி, அந்த அமைதியான பகுதி விரைவில் தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரமாக மாறியது.
ஜொஹானஸ்பர்க், 2.7 முதல் 2.9 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான Witwatersrand படுக்கையின் மீது அமைந்துள்ளது.
இங்கு உள்ள தங்கக் களஞ்சியங்கள், மனித வரலாற்றில் வெட்டி எடுக்கப்பட்ட தங்கத்தின் 40 சதவீதத்திற்கும் மேற்பட்டதை வழங்கியுள்ளன.
Mponeng போன்ற ஆழமான சுரங்கங்கள் 4 கி.மீ. ஆழம் வரை தோண்டப்பட்டு, 60 டிகிரி செல்ஸியஸ் வெப்பத்தில் கூட தங்கம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.
புவியியல் ஆய்வாளர்கள், பழமையான விண்கல் தாக்கம் இந்த தங்கக் களஞ்சியங்களை அழிவிலிருந்து காத்ததாகக் கூறுகின்றனர். இன்று, 10 மில்லியனுக்கும் மேற்பட்ட மரங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய நகர வனங்களில் ஒன்றாக ஜொஹானஸ்பர்க் விளங்குகிறது.
பல பழைய சுரங்கங்கள் மூடப்பட்டிருந்தாலும், ஜொஹானஸ்பர்க் இன்னும் பொருளாதார மையமாகவும், Johannesburg Stock Exchange மற்றும் வரலாற்று தளங்களால் உலகம் முழுவதும் பார்வையாளர்களை ஈர்க்கும் நகரமாகவும் உள்ளது.




