தென் கொரியாவில் இருந்து ஏவுகணைகளை மத்திய கிழக்கிற்கு மாற்றும் அமெரிக்கா

2 Min Read

வட கொரியாவின் அச்சுறுத்தலை முறியடிக்க தென் கொரியாவில் அமைக்கப்படிருந்த THAAD அமைப்புகளை அமெரிக்கா தற்போது ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

THAAD அமைப்புகள்

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தென் கொரியாவை அதிர்ச்சியடைய வைத்துள்ளதுடன், பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. தென் கொரியாவின் Seongju கிராமத்திலேயே கடந்த 2017 முதல் அமெரிக்காவின் THAAD ஏவுகணை அமைப்புகள் செயல்பட்டு வருகிறது.

தென் கொரியாவில் இருந்து ஏவுகணைகளை மத்திய கிழக்கிற்கு மாற்றும் அமெரிக்கா | Redeployment Us Missiles From Korea

இப்பகுதியில் THAAD அமைப்புகளின் நிலைநிறுத்தம் வட கொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கு இலக்காக மாறும் என்று கூறிய உள்ளூர்வாசிகளின் எதிர்ப்புகளை தென் கொரிய அரசாங்கம் அப்போது புறக்கணித்தது.

மட்டுமின்றி, வட கொரிய ஏவுகணைகள் தென் கொரியாவையும் Seongju கிராமத்தில் முகாமிட்டுள்ள 28,500 அமெரிக்க துருப்புக்களையும் அச்சுறுத்துவதற்கு முன்பு, அவற்றைக் கண்டுபிடித்து அழிக்க THAAD அமைப்புகள் மிகவும் பயனுள்ள வழி என்றும் தென் கொரியா வாதிட்டது.

THAAD அமைப்புகள் நிறுவப்பட்டது சீனாவையும் ரஷ்யாவையும் கோபப்படுத்தியது. அதன் சக்திவாய்ந்த ரேடார் தங்களின் பாதுகாப்பை சமரசம் செய்யக்கூடும் என்றும் கூறினர்.

ஆனால், தற்போது Seongju கிராமத்தில் இருந்து THAAD அமைப்புகளை மொத்தமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்டை நாடு மீது அழுத்தம்

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தென் கொரியாவிற்கான டொனால்ட் ட்ரம்பின் பாதுகாப்பு உறுதிப்பாடு குறித்து சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மேலும், அணு ஆயுதம் ஏந்திய வட கொரியா அதன் அண்டை நாடு மீது அழுத்தத்தை அதிகரிக்க முயலக்கூடும் என்றும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங், வடக்கிலிருந்து வரும் அச்சுறுத்தல்களைத் தடுக்க முடியும் என்பதை பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

தென் கொரியாவில் இருந்து ஏவுகணைகளை மத்திய கிழக்கிற்கு மாற்றும் அமெரிக்கா | Redeployment Us Missiles From Korea

அத்துடன், தென் கொரியாவின் பாதுகாப்பு பட்ஜெட் உலகிலேயே மிக அதிகமென்றும், இது வட கொரியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட 1.4 மடங்கு அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, தென் கொரிய ஊடகங்கள் சில ஏவுகணை பேட்டரிகள் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க தளங்களுக்கு மீண்டும் அனுப்பப்பட வாய்ப்புள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகளை வெளியிட்டன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *