ஈரான், உலகின் முக்கியமான எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அமைக்கத் தொடங்கியுள்ளன.
அமெரிக்க உளவுத்துறை வெளியிட்ட தகவலின்படி, கடந்த சில நாட்களில் சில டசன் கண்ணிவெடிகளை போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையிடம் (IRGC), இன்னும் 80 முதல் 90 சதவீதம் வரையிலான சிறிய கப்பல்கள் மற்றும் கண்ணிவெடி அமைக்கும் படகுகள் தக்கவைக்கப்பட்டுள்ளன.
அவற்றின்மூலம் இன்னும் நூற்றுக்கணக்கான கண்ணிவெடிகளை அமைக்கும் திறன் ஈரானுக்கு உள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நடைபெறும் மோதலின் பின்னணியில், ஈரான் கடல்வழித்தடத்தை மூடுவதாக எச்சரித்துள்ளது.
இதனால், ஒரு நாளைக்கு சுமார் 15 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் 4.5 மில்லயன் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் வளைகுடாவில் சிக்கித் தவிக்கின்றன.
ஈராக், குவைத் போன்ற நாடுகளுக்கு மாற்று வழிகள் இல்லாததால், உலக எரிசக்தி சந்தையில் கடுமையான அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், “ஈரான் கண்ணிவெடிகளை அமைத்திருத்தால், அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையெனில் இதுவரை இல்லாத அளவிலான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்” என எச்சரித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அமெரிக்க பாதுகாப்புத்துறை, ஹார்முஸ் கடல்பாதையில் ஈரானின் பல கப்பல்களை அழித்ததாக அறிவித்துள்ளது.
இந்த சூழ்நிலை காரணமாக, செவ்வாய்கிழமை உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 80 முதல் 90 டொலர் வரை ஏற்ற இரக்கத்தை சந்தித்தது.
உலகின் பெரிய பொருளாதார நாடுகளான G7 குழு, எண்ணெய் பற்றாக்குறையை சமாளிக்க கூடுதல் கையிருப்பு வெளியிடும் வாய்ப்பு இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.
ஹார்முஸ் நீரிணையில் தற்போது மரண பள்ளத்தாக்கு என விவரிக்கப்படுகிறது. உலக எரிசக்தி பாதுகாப்பிற்கு மிகப்பெரிய சவாலாக இந்த நிலைமை மாறியுள்ளது.




