கமேனி இருந்த இடத்தை அறிந்துகொண்டது எப்படி? பல ஆண்டுகளாக Mossad, CIA தீட்டிய திட்டம்

1 Min Read

கமேனி படுகொலை ஒரே இரவில் போடப்பட்ட திட்டம் அல்ல, பல ஆண்டுகள் அமெரிக்க-இஸ்ரேல் உளவு அமைப்புகளால் ஒருங்கிணைந்து தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஈரான் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்ட சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1989 முதல் ஈரானின் உச்சத் தலைவராக இருந்த கமேனி, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள Pasteur Street பகுதியில் நடந்த கூட்டத்தின் போது இஸ்ரேல்-அமெரிக்காவின் கூட்டு தாக்குதலில் உயிரிழந்தார்.

அறிக்கைகளின்படி, தெஹ்ரானில் உள்ள போக்குவரத்து கமெராக்கள் பல ஆண்டுகளாக ஹேக் செய்யப்பட்டிருந்தன.

Mossad மற்றும் CIA இணைந்து, கமேனியின் பாதுகாப்பு குழுவின் அன்றாட செயல்பாடுகள், பயண வழிகள், பணிநேரங்கள் போன்ற தகவல்களை சேகரித்தன. இவை “pattern of life” எனப்படும் உளவுத்துறை முறையில் பகுப்பாய்வு செய்யப்பட்டன.

மேலும், Pasteur Street அருகிலுள்ள மொபைல் டவர்களும் செயலிழக்கச் செய்யப்பட்டதால், பாதுகாப்பு குழுவிற்கு எச்சரிக்கை தகவல்கள் செல்லவில்லை. இதன் மூலம், கமேனி கூட்டத்தில் இருப்பார் என்பதை உறுதிப்படுத்திய இஸ்ரேல்-அமெரிக்கா, தாக்குதலை முன்னெடுத்தன.

அமெரிக்கா சைபர் தாக்குதல்களை நடத்தி ஈரானின் பாதுகாப்பு அமைப்புகளை முடக்கியது. பின்னர், இஸ்ரேல் விமானப்படை 200-க்கும் மேற்பட்ட போர் விமானங்களை பயன்படுத்தி 500 இலக்குகளை தாக்கியது.

‘Sparrow’ எனும் சிறப்பு ஏவுகணைகள் 1,000 கிலோமீட்டர் தூரத்திலிருந்தே குறி வைக்கப்பட்ட இடங்களைத் தாக்கின.

கமேனி, ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா போல மறைந்து வாழவில்லை. பொதுவெளியில் மக்கள் மத்தியில் தோன்றிய அவர், தன் உயிர் ஈரானின் எதிர்காலத்தில் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாது எனக் கூறியிருந்தார். ஆனால், இந்த தாக்குதல் ஈரானின் அரசியல் மற்றும் மத அமைப்பில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *