ஸ்ம்ரிதி மந்தனா டக்அவுட்..185 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி! இந்தியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா

1 Min Read

இந்திய மகளிர் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா 185 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அலிஸ்ஸா ஹீலி 158 ஓட்டங்கள்

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹோபர்ட்டில் நடந்தது.

முதலில் ஆடிய அவுஸ்திரேலியா 409 ஓட்டங்கள் குவித்தது. அலிஸ்ஸா ஹீலி (Alyssa Healy) 158 ஓட்டங்களும், பெத் மூனி 106 ஓட்டங்களும் எடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் ஸ்ம்ரிதி மந்தனா (Smriti Mandhana) டக்அவுட் ஆக, பிரதிகா ராவல் 27 ஓட்டங்களும், ஜெமிமா ரோட்ரிகஸ் 42 ஓட்டங்களும் விளாசினர்.

185 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

எனினும் அடுத்து வந்த வீராங்கனைகள் எவரும் 30 ஓட்டங்களுக்கு மேல் தாண்டவில்லை. கடைசி கட்டத்தில் ஸ்நேஹ் ராணா மட்டும் போராடி 44 ஓட்டங்கள் எடுத்தார். 45.1 ஓவர்கள் வரை தாக்குபிடித்த இந்திய அணி 224 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.

இதன்மூலம் அவுஸ்திரேலியா 185 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அவுஸ்திரேலிய தரப்பில் அலானா கிங் 4 விக்கெட்டுகளும், வார்ஹம் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *