இந்த வழக்கு விசாரணை 2026 ஏப்ரல் 20-ஆம் திகதி நடைபெற உள்ளது.
அவரது மனைவி சங்கீதா சோர்ணலிங்கம் செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார்.
சங்கீதா, மனுவில் விஜய் ஒரு நடிகையுடன் தொடர்பில் உள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார். இதனால் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை 2026 ஏப்ரல் 20-ஆம் திகதி நடைபெற உள்ளது.
இதற்கிடையில், பிரபல ஜோதிடர் பிரஷாந்த் கினி, விஜயின் அரசியல் எதிர்காலம் குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர், “விஜய் 2030-க்குப் பிறகு அரசியலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவார். இந்த முறை அவர் தமிழக அரசியலில் தனது இருப்பை காட்டுவார், ஆனால் முதல்வர் ஆகமாட்டார். எதிர்காலத்தில் அவர் நிச்சயமாக முதல்வராக வருவார்” எனக் கூறியுள்ளார்.
மேலும், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போல சினிமா-அரசியல் வரலாறு மீண்டும் நிகழலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதோடு, விஜயின் கடைசி படம் ஜன நாயகன் தணிக்கைச் சான்றிதழ் பிரச்சினையால் தாமதமாகியுள்ளது. 2026 ஜனவரியில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தாலும், மத்திய திரைப்பட தணிக்கைச் சான்றிதழ் வாரியம் அனுமதி வழங்காததால் படம் இன்னும் வெளியாகவில்லை.
தேர்தல் காலத்தில் விவாகரத்து வழக்கு, திரைப்பட தாமதம், ஜோதிடர் கணிப்பு ஆகியவை இணைந்து விஜயின் அரசியல் பயணத்தில் சிக்கலான சூழ்நிலையை உருவாக்கியுள்ளன.




