இந்தியாவின் விதிவிலக்கான ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதாக, பிரதமர் நரேந்திர மோடியிடம் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கூறினார்.
இந்திய AI உச்சிமாநாடு
AI தாக்க உச்சி மாநாட்டில் பங்கேற்க வருகை தந்த இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பல உலகத் தலைவர்களுடன் கலந்துரையாடினார்.
உச்சி மாநாட்டில் தனது உரையின்போது, அனைத்து மனிதகுலத்திற்கும் சேவை செய்யும் எதிர்காலத்தை நோக்கி செயற்கை நுண்ணறிவை (AI) வழிநடத்துவதில் கவனம் செலுத்தியதாக திசாநாயக்க குறிப்பிட்டார்.
“எனது உரையில், தொழில்நுட்பம் நமது கலாச்சார விழுமியங்களையும், மனித திறன்களையும் அரிக்காமல் உயர்த்துவதற்கான ஒரு கருவியாக இருக்க வேண்டும் என்பதை நான் வலியுறுத்தினேன். நாகரிகத்தின் எதிர்காலம் இந்த சமநிலையை சார்ந்துள்ளது” என்றும் அவர் கூறினார். அதேபோல் டெல்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
அழைப்பிற்கு நன்றி
அதன் பின்னர் அவர் வெளியிட்ட பதிவில், “இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் புதுடெல்லியில் ஒரு கூட்டத்திற்காக இணைந்தார்.
2026ஆம் ஆண்டுக்கான AI தாக்க உச்சிமாநாட்டிற்கான அழைப்பிற்கு நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன்.
நமது வரலாற்று உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விரிவான விவாதங்களை நடத்தினோம். சமீபத்திய தித்வா புயலின்போது இந்தியாவின் விதிவிலக்கான ஆதரவிற்கும் நான் நன்றி தெரிவித்தேன்” என தெரிவித்துள்ளார்.
இலங்கையை “மதிப்புமிக்க அண்டை நாடு” என்று என்று பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) வர்ணித்தார்.
அவரது பதிவில், “டில்லியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களை சந்தித்தமை மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். அண்மைய காலங்களில் இந்திய இலங்கை உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பாக நாம் மீளாய்வு செய்திருந்தோம். அத்துடன் எரிசக்தி, இணைப்புகள், உட்கட்டமைப்பு, சுகாதார பராமரிப்பு, திறன் விருத்தி, கலாச்சாரம், நீலப் பொருளாதாரம் மற்றும் ஏனைய துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகள் தொடர்பாகவும் நாம் கலந்துரையாடியிருந்தோம்” என கூறியுள்ளார்.




