மணமகன் குறித்து தெரியவந்த அதிர்ச்சித் தகவல்: பாதியில் நின்ற திருமணம்

1 Min Read

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், கிட்டத்தட்ட திருமணம் முடிய இருந்த நேரத்தில், கடைசி கட்ட சடங்குகள் நடந்துகொண்டிருக்க, மணமகனைக் குறித்த அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று மணமகள் வீட்டாருக்குக் கிடைத்தது!

வாழ்த்த வந்த திருநங்கைகள்

சனிக்கிழமை, உத்தரப்பிரதேசத்திலுள்ள Barabanki என்னுமிடத்தில் ஒரு திருமணத்திற்கான சடங்குகள் நடந்துகொண்டிருந்திருக்கின்றன.

மணமகன் குறித்து தெரியவந்த அதிர்ச்சித் தகவல்: பாதியில் நின்ற திருமணம் | Wedding Called Off After Know Groom Is Transgender

வட இந்திய திருமணங்கள் சிலவற்றில் மணமக்களை திருநங்கைகள் வாழ்த்துவது வழக்கம்.

அவ்வகையில், இந்த மணமக்களை வாழ்த்த வந்த திருநங்கைகள், மணமகனை தங்களுக்குத் தெரியும் என்றும், அவரும் ஒரு திருநங்கை என்றும் கூற, திருமண மண்டபமே ஒரு கணம் அதிர்ந்துள்ளது.

உண்மை வெளியானது தெரிந்ததும், மணமகன் வீட்டார் பலர் வேகமாக அங்கிருந்து வெளியேற, அவர்களுடன் வெளியேற முயன்ற மணமகனையும் அவரது தாயையும் தடுத்து நிறுத்தியுள்ளனர் மணமகள் வீட்டார்.

அதற்குள் தகவல் பரவி கிராம மக்கள் அங்கு கூட, இரு தரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட, கடைசியில் தங்களை அவமானப்படுத்திவிடவேண்டாம் என கேட்டுக்கொண்ட மணமகன் வீட்டார், மணமகளுக்கு 23,000 ரூபாய் கொடுக்க முன்வந்துள்ளனர்.

அதற்குள் பொலிசார் அங்கு வர, பிரச்சினை பெரிதாகாமல் தடுக்கப்பட்டுள்ளது. என்றாலும், யாரும் எந்த புகாரும் அளிக்காததால், பொலிசாரால் எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியவில்லை என்கிறார்கள் அதிகாரிகள்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *