டெல்லியில் உலகளாவிய மிகப்பெரிய AI உச்சிமாநாடு… 600 நிறுவனங்கள், 2.5 லட்சம் பார்வையாளர்கள்

1 Min Read

இந்தியா தலைநகர் டெல்லியில், சுமார் 600 நிறுவனங்கள் பங்கேற்கும் உலகளாவிய மிகப்பெரிய AI உச்சிமாநாடு நடக்கவிருக்கிறது.

AI இம்பாக்ட் எக்ஸ்போ

திங்கட்கிழமை 16 ஆம் திகதி தொடங்கி, 20 ஆம் திகதி வரையில் நடைபெற உள்ளது. இந்த உச்சிமாநாட்டுடன் இந்திய AI இம்பாக்ட் எக்ஸ்போ 2026-ம் நடைபெறும்.

டெல்லியில் உலகளாவிய மிகப்பெரிய AI உச்சிமாநாடு... 600 நிறுவனங்கள், 2.5 லட்சம் பார்வையாளர்கள் | Mega Global Ai Summit

அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கையில், மனித முயற்சியின் ஒவ்வொரு களத்திலும் முன்னேற்றங்களுக்கு முன்னோடியில்லாத வாய்ப்புகளைத் திறக்கும் ஒரு தொழில்நுட்ப புரட்சிக்கு இந்த உச்சிமாநாடு வழி வகுக்கிறது என குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியா AI இம்பாக்ட் எக்ஸ்போ 2026, 70,000 சதுர மீற்றருக்கும் அதிகமான பரப்பளவில் 10 அரங்குகளில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள், சிறு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், அமைச்சகங்கள் மற்றும் சர்வதேச பங்குதாரகள் என பலர் கலந்து கொள்வார்கள்.

இந்த மெகா நிகழ்வில் 13 நாடுகளின் அரங்குகள் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர், இது AI உலகின் சர்வதேச ஒத்துழைப்பை எடுத்துக்காட்டுகிறது என்றே குறிப்பிடுகின்றனர்.

இந்த அரங்குகள் அவுஸ்திரேலியா, ஜப்பான், ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, செர்பியா, எஸ்டோனியா, தஜிகிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும்.

டெல்லியில் உலகளாவிய மிகப்பெரிய AI உச்சிமாநாடு... 600 நிறுவனங்கள், 2.5 லட்சம் பார்வையாளர்கள் | Mega Global Ai Summit

12 உள்நாட்டு மாதிரிகள்

சர்வதேச அரங்குகளைத் தவிர, இந்த நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட தெரிவு செய்யப்பட்ட கண்காட்சி அரங்குகள் மற்றும் நேரடி செயல் விளக்கங்களும் இடம்பெறும்.

இந்த நிகழ்வில் 600-க்கும் மேற்பட்ட இளம் நிறுவனங்கள் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்வில் உள்நாட்டு ஸ்டார்ட்அப்கள் மற்றும் கூட்டமைப்புகளால் உருவாக்கப்பட்ட 12 உள்நாட்டு மாதிரிகள் அறிமுகப்படுத்தப்படும்.

டெல்லியில் உலகளாவிய மிகப்பெரிய AI உச்சிமாநாடு... 600 நிறுவனங்கள், 2.5 லட்சம் பார்வையாளர்கள் | Mega Global Ai Summit

இந்திய தரவுத்தொகுப்புகள் மற்றும் அதன் பன்மொழி பார்வையாளர்களின்படி பயிற்சி பெற்று வடிவமைக்கப்பட்டவர்கள் இவர்கள். இந்த மாதிரிகள் இந்தியாவின் 22 அதிகாரப்பூர்வ மொழிகளிலும் பயிற்சி அளிக்கப்படும்.

இந்திய AI இம்பாக்ட் எக்ஸ்போ 2026 நிகழ்வானது 2.5 லட்சம் பார்வையாளர்களை ஈர்க்கும் என்றே நம்பப்படுகிறது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *