உலகமெங்கும் தடாலடியாக அதிகரிக்கும் கைவிடப்படும் எண்ணெய் கப்பல்களின் எண்ணிக்கை

2 Min Read

கடந்த ஆண்டில், உலகம் முழுவதும் கைவிடப்பட்ட எண்ணெய் கப்பல்கள் மற்றும் பிற வணிகக் கப்பல்களின் எண்ணிக்கையில் பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய கச்சா எண்ணெய்

இந்த அதிகரிப்பிற்கு என்ன காரணம்? பாதிக்கப்பட்ட வணிக மாலுமிகள் நிலை என்ன என்பது போன்ற கேள்விகள் தற்போது வலுத்து வருகிறது.

உலகமெங்கும் தடாலடியாக அதிகரிக்கும் கைவிடப்படும் எண்ணெய் கப்பல்களின் எண்ணிக்கை | Abandoned Oil Tankers

சீனாவின் கடல் எல்லைக்கு வெளியே கைவிடப்பட்ட நிலையில் உள்ள ஒரு எண்ணெய் கப்பல் இருந்து ஒரு மூத்த கப்பல் தள அதிகாரி தெரிவிக்கையில், இறைச்சி, தானியம், மீன் உட்பட உயிர்வாழ்வதற்கான எளிய விடயங்களின் பற்றாக்குறை இருக்கிறது, இது எங்கள் உடல்நலத்தையும் எங்கள் செயல்பாட்டு சூழலையும் பாதித்துள்ளது என்று அந்த ரஷ்ய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

மொத்த ஊழியர்களும் கடும் கோபத்தில் இருப்பதாக குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு நாளும் செத்துப்பிழைப்பதாகவும் கூறியுள்ளார். தொடர்புடைய எண்ணெய் கப்பலில் கிட்டத்தட்ட750,000 பீப்பாய்கள் ரஷ்ய கச்சா எண்ணெய் நிரப்பப்ப்ட்டுள்ளது.

அதன் தோராயமான மதிப்பு சுமார் 50 மில்லியன் டொலர் என்றே கூறப்படுகிறது. நவம்பர் மாதம் தொடக்கத்தில் ரஷ்யாவில் இருந்து சீனாவிற்கு புறப்பட்ட அந்த கப்பல், டிசம்பர் மாதத்தில் அதன் உரிமையாளர்களால் கைவிடப்பட்டுள்ளது.

அந்தக் கப்பல் தற்போதும் சர்வதேசக் கடல் எல்லையில் உள்ளது. அதைச் சுற்றியுள்ள ஆய்வு அந்த அளவுக்கு அதிகமாக இருப்பதால், சீனா அதை துறைமுகத்திற்குள் அனுமதிக்க விரும்பவில்லை.

உலகமெங்கும் தடாலடியாக அதிகரிக்கும் கைவிடப்படும் எண்ணெய் கப்பல்களின் எண்ணிக்கை | Abandoned Oil Tankers

எண்ணிக்கை 410

2016 ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் இதுபோன்ற 20 கப்பல்கள் கைவிடப்பட்டதாக ITF தெரிவித்துள்ளது. ஆனால், 2025 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 410 ஆக உயர்ந்தது, 6,223 ஊழியர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர்.

சமீபத்திய ஆண்டுகளில் இந்த அதிகரிப்புக்கு புவிசார் அரசியல் உறுதியற்ற தன்மை ஒரு முதன்மை காரணியாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் பல காரணிகள் முன்வைக்கப்பட்டாலும், ரஷ்யா மற்றும் ஈரானில் இருந்து எண்ணெய் கடத்தும் கப்பல்களே பெருமளவில் கைவிடப்படுவதாக ITF தெரிவித்துள்ளது.

உலகமெங்கும் தடாலடியாக அதிகரிக்கும் கைவிடப்படும் எண்ணெய் கப்பல்களின் எண்ணிக்கை | Abandoned Oil Tankers

2025ல் மட்டும் இதுபோன்ற கப்பல்களால் அதிகமாக பாதிக்கப்பட்ட கப்பல் ஊழியர்கள் இந்தியர்கள் என்றே தெரிய வருகிறது. 1,125 இந்தியர்களும் 539 பிலிப்பைன்ஸ் நாட்டவர்கலும் சிரியாவை சேர்ந்த 309 பேர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 86 வெளிநாட்டு எண்ணெய் கப்பல்களை இந்தியா கருப்பு பட்டியலில் சேர்த்தது. மேலும், கடல்சார் சேவையின் உள்ளார்ந்த ஆபத்துகளிலிருந்து ஊழியர்களைப் பாதுகாக்க அதிக சர்வதேச ஒத்துழைப்பு தேவைப்படும் என்றே கூறுகின்றனர்.
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *