பாலஸ்தீன ஆதரவு குழு மீதான பிரித்தானியாவின் பயங்கரவாத தடை செல்லாது… லண்டன் நீதிமன்றம்

1 Min Read

பாலஸ்தீன ஆதரவு பிரச்சாரக் குழுவான Palestine Action-ஐ பயங்கரவாத அமைப்பாக பிரித்தானிய அரசாங்கம் தடை செய்தது சட்டவிரோதமானது என்று லண்டன் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சர்வாதிகார கட்டுப்பாடு

தொடர்புடைய குழுவின் நிறுவனர் மேல்முறையீடு செய்த வழக்கில் வெள்ளிக்கிழமை லண்டன் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் Palestine Action குழு தடைசெய்யப்பட்டது.

பாலஸ்தீன ஆதரவு குழு மீதான பிரித்தானியாவின் பயங்கரவாத தடை செல்லாது... லண்டன் நீதிமன்றம் | Ban On Palestine Action Was Unlawful

இஸ்ரேலுடன் தொடர்புடைய பாதுகாப்பு நிறுவனங்களை அதிகளவில் குறிவைத்து சேதம் ஏற்படுத்திய நிலையிலேயே அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டது.

மட்டுமின்றி, இந்தத் தடை Palestine Action குழுவை ஐ.எஸ் அல்லது அல்கொய்தாவுடன் இணையாக சித்தரிக்கப்பட்டது. மட்டுமின்றி, குழுவில் உறுப்பினராக இணைவதே குற்றமாகவும் அறிவிக்கப்பட்டது.

அவ்வாறு நிரூபணமானால், 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனைக்கு வாய்ப்பாக அமையும் என்றும் அச்சுறுத்தப்பட்டது. இந்த நிலையில், குழுவின் இணை நிறுவனரான Huda Ammori சார்பில் வாதிட்ட சட்டத்தரணிகள்,

அமுலில் இருக்கும்

ஸ்டார்மர் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையின் மீதான ஒரு சர்வாதிகார கட்டுப்பாடு என்று குறிப்பிட்டுள்ளனர். இந்தத் தடை, கருத்துச் சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரத்தில் விகிதாசாரமற்ற தலையீடு என்பது உட்பட, இரண்டு வாதங்களை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

இருப்பினும், அம்மோரி மற்றும் உள்விவகார அலுவலக சட்டத்தரணிகள் தடையை நீக்க வேண்டுமா என்பது குறித்து நீதிமன்றத்தில் முறையிட அவகாசம் அளிக்கும் வகையில் தடை அமுலில் இருக்கும் என்று நீதிபதி விக்டோரியா ஷார்ப் கூறியுள்ளார்.

பாலஸ்தீன ஆதரவு குழு மீதான பிரித்தானியாவின் பயங்கரவாத தடை செல்லாது... லண்டன் நீதிமன்றம் | Ban On Palestine Action Was Unlawful

மட்டுமின்றி, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் விளைவுகள் என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து எழுத்துப்பூர்வ வாதங்களை வழங்க இரு தரப்பினருக்கும் பிப்ரவரி 20 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை கடந்த ஆண்டு ஜூலை 5 ஆம் திகதி அமுலுக்கு வந்தது. இந்தக் குழுவில் உறுப்பினர் சேர்க்கை அல்லது ஆதரவளிப்பது குற்றவியல் குற்றமாக மாற்றப்பட்டது.

தடை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அந்தக் குழுவை ஆதரித்ததற்காக ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *