நவகிரகங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.
அந்தவகையில், சூரியன் பிப்ரவரி 13ஆம் திகதி கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார்.
இந்த கும்ப ராசியில் ஏற்கனவே நிழல் கிரகமான ராகு பயணித்து வருகிறார்.
இதனால் இந்த சூரிய பெயர்ச்சியால் கும்பத்தில் ராகு மற்றும் சூரியனின் சேர்க்கை நிகழவுள்ளது.
இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையின் காரணமாக கிரகண யோகம் உருவாகவுள்ளது. இந்த கிரகண யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் பணயோகத்தை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
எச்சரிக்கையாக இருக்க வேண்டும. தவறான புரிதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும். பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். அமைதியாக இருந்து எந்த வேலையையும் செய்ய வேண்டும்.

சிம்மம்
திருமண வாழ்க்கையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். வணிக கூட்டாளியுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். பேசும் போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

விருச்சிகம்
தனிப்பட்ட வாழ்க்கை மோசமாக பாதிக்கப்படும். குடும்ப சூழல் பிரச்சனைகள் நிறைந்து இருக்கும். தாயாரின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ரியல் எஸ்டேட் விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கும்பம்
ஆரோக்கியம் மோசமாக இருக்கும். பெரிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். முதலீடுகளை செய்யும் முன் யோசித்து செய்ய வேண்டும். அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். கவனமாக இருப்பது அவசியம்.

\




