இறுதியாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்! ரூ.1500 கோடிக்கும் மேல்..கொழும்பில் மோதல்

1 Min Read

கொழும்பில் நடைபெற இருக்கும் இந்திய அணிக்கு எதிரான போட்டியை புறக்கணிக்கும் முடிவில் இருந்து பாகிஸ்தான் பின்வாங்கியுள்ளது.

பாகிஸ்தான் தரப்பில் நிபந்தனைகள்

டி20 உலகக்கிண்ணத்தில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விளையாட பாகிஸ்தான் மறுத்து வந்தது.

India vs Pakistan match icc save rs.1560 crore

இதுதொடர்பான பேச்சுவார்த்தையில் ஐசிசி ஈடுபட்டபோது, பாகிஸ்தான் தரப்பில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து இறுதியாக பாகிஸ்தான் தனது கிரிக்கெட் அணியை இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட அனுமதித்தது.

திங்களன்று பாகிஸ்தான் அரசு தனது முடிவை அறிவித்த நிலையில், இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள்களில் வெளியான ஒரு ஊடக அறிக்கையின்படி, பாகிஸ்தானின் இந்த பின்வாங்கலுக்கு பின்னால் சுமார் ரூ.1560 கோடி அல்லது 174 மில்லியன் டொலர்கள் வணிகம் ஈடுபட்டுள்ளது.

ரூ.1500 கோடிக்கும் மேல்

அதாவது, ஒளிபரப்பாளர்களிடம் இருந்து ஊடக உரிமைகள், டிக்கெட் விற்பனை மற்றும் ஸ்பான்ஸர்ஷிப் வருவாய் ஆகியவற்றின் மூலம் ரூ.1500 கோடிக்கும் மேல் சேமிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

India vs Pakistan match icc save rs.1560 crore

இதுதொடர்பான ஐசிசி அறிக்கையில், “ஐ.சி.சி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத்தில் வங்காளதேச கிரிக்கெட் அணியின் துரதிர்ஷ்டவசமான இல்லாமையைப் பற்றி சிந்திக்கும் அதே வேளையில், கிரிக்கெட்டிற்கான உலகளாவிய நிர்வாகக் குழு, பெருமைமிக்க கிரிக்கெட் வரலாற்றையும் உலகளாவிய விளையாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கையும் கொண்ட ஒரு மதிப்புமிக்க முழு உறுப்பினரான PCBயின் நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியது.

200 மில்லியனுக்கும் அதிகமான் ஆர்வமுள்ள ரசிகர்களைக் கொண்ட கிரிக்கெட்டின் மிகவும் துடிப்பான சந்தைகளில் ஒன்றான ஐ.சி.சி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தில் தேசிய அணி பங்கேற்காதது நாட்டில் கிரிக்கெட்டில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதிசெய்ய, ஐ.சி.சி அதன் தொடர்ச்சியான உதவியை மீண்டும் வலியுறுத்தியது” என்று ஐ.சி.சி அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

India vs Pakistan match icc save rs.1560 crore

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *