அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால்… இந்திய எண்ணெய் நிறுவனங்கள் எடுத்த முடிவு

3 Min Read

இந்தியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஏப்ரல் மாத விநியோகத்திற்கான ரஷ்ய எண்ணெயை வாங்குவதைத் தவிர்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உதவக்கூடும்

 

அத்துடன், நீண்ட காலத்திற்கு இதுபோன்ற வர்த்தகங்களிலிருந்து விலகியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கையானது இந்திய அரசாங்கம் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு உதவக்கூடும் என்று சுத்திகரிப்பு மற்றும் வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால்... இந்திய எண்ணெய் நிறுவனங்கள் எடுத்த முடிவு | Indian Refiners Avoid Russia

அமெரிக்காவும் இந்தியாவும் வெள்ளிக்கிழமை அன்று ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கி மேலும் நெருங்கி வந்துள்ளன. மார்ச் மாதத்திற்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் என்று தாங்கள் நம்பும் ஒரு ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பு ஒன்றை இரு நாடுகளும் அறிவித்துள்ளன.

இந்த ஒப்பந்தம் வரிகளைக் குறைத்து, பொருளாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்தும் என்றே நம்பப்படுகிறது. இந்த நிலையில், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ரஷ்ய எண்ணெயை ஏற்றுமதி செய்வதற்கான வர்த்தகர்களின் அழைப்புகளை ஏற்கவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், இந்த சுத்திகரிப்பு நிறுவனங்கள் மார்ச் மாதத்திற்கான ரஷ்ய எண்ணெய் ஒப்பந்தங்களை ஏற்கனவே திட்டமிட்டிருந்ததாக சுத்திகரிப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால், பெரும்பாலான பிற சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவதை நிறுத்திவிட்டன. வர்த்தகக் கட்டமைப்பு குறித்த அமெரிக்க-இந்திய அறிக்கையில் ரஷ்ய எண்ணெய் பற்றி குறிப்பிடப்படாதபோதிலும், ரஷ்ய எண்ணெய் கொள்முதல் காரணமாக இந்தியப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட 25 சதவீத வரியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரத்து செய்துள்ளார்.

மட்டுமின்றி, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்வதை நிறுத்துவதாக இந்தியா உறுதியளித்துள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

ஆனால், ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்வதை நிறுத்தும் திட்டமிருப்பதாக இந்தியா இதுவரை அறிவிக்கவில்லை. 2022-ல் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்த பிறகு, தள்ளுபடி விலையில் கிடைக்கும் ரஷ்ய கடல்வழி கச்சா எண்ணெயின் மிகப்பெரிய இறக்குமதியாளராக இந்தியா மாறியது.

அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால்... இந்திய எண்ணெய் நிறுவனங்கள் எடுத்த முடிவு | Indian Refiners Avoid Russia

இது, ரஷ்யாவின் வருவாயைக் குறைத்து, போருக்கு நிதியளிப்பதை கடினமாக்கும் நோக்கில் ரஷ்யாவின் எரிசக்தித் துறை மீது தடைகளை விதித்திருந்த மேற்கத்திய நாடுகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பைத் தூண்டியது.

ரஷ்யாவின் ஆதரவு பெற்ற தனியார் சுத்திகரிப்பு நிறுவனமான நயாரா, வழக்கமான இந்திய இறக்குமதியாளர்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் தனது ஒரு நாளைக்கு 400,000 பேரல் சுத்திகரிப்பு ஆலைக்கு முழுவதுமாக ரஷ்ய எண்ணெயையே சார்ந்துள்ளது.

அறிவுறுத்தலின் பேரில்

வெளியான தகவலின் அடிப்படையில், ஐரோப்பிய ஒன்றியம் ஜூலை மாதம் அந்த சுத்திகரிப்பு நிறுவனத்தின் தாய் நிறுவனம் மீது தடை விதித்த பிறகு, மற்ற கச்சா எண்ணெய் விற்பனையாளர்கள் பின்வாங்கியதால், நாயரா நிறுவனம் ரஷ்ய எண்ணெயைத் தொடர்ந்து வாங்க அனுமதிக்கப்படலாம் என்றே கூறப்படுகிறது.

இதனிடையே, ஒரு மாதம் நீடிக்கும் சுத்திகரிப்பு நிலையப் பராமரிப்புப் பணி காரணமாக, ஏப்ரல் மாதத்தில் ரஷ்ய கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய நயாரா நிறுவனமும் திட்டமிடவில்லை என்றே கூறப்படுகிறது.

மேலும், அரசாங்கத்தின் அறிவுறுத்தலின் பேரில் மட்டுமே இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் தங்கள் திட்டத்தை மாற்றி, ரஷ்ய எண்ணெய்க்கு ஆர்டர்களை வழங்கக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால்... இந்திய எண்ணெய் நிறுவனங்கள் எடுத்த முடிவு | Indian Refiners Avoid Russia

இதனிடையே, கடந்த ஆண்டு சராசரியாக 1.7 மில்லியன் பீப்பாய்களாக இருந்த ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை, மார்ச் மாதத்திற்குள் ஒரு மில்லியன் பீப்பாய்க்கும் குறைவாகக் குறைக்க இந்தியா தயாராகி வருவதாகவும், இறுதியில் அதன் அளவு 500,000 முதல் 600,000 பீப்பாய்களாகக் குறையும் என்றும் கடந்த மாதம் தகவல்கள் வெளியாகின.

2025 ஆம் ஆண்டின் மத்தியில் இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி ஒரு நாளைக்கு 2 மில்லியன் பீப்பாய்களைத் தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *