பிரார்த்தனை செய்து விட்டு 17வது மாடியில் இருந்து குதித்த தொழிலதிபர் – என்ன காரணம்?

2 Min Read

பிரார்த்தனை செய்து விட்டு 17வது மாடியில் இருந்து தொழிலதிபர் கீழே குதித்த வீடியோ வைரலாகி வருகிறது.

17வது மாடியில் இருந்து குதித்த தொழிலதிபர்

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரை சேர்ந்தவர் 59 வயதான சுனில் மோதிலால் சதரங்கனி. இவர், முல்தானி என்ற பிரபல பேக்கரி ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவர், பல ஆண்டுகளுக்கு முன்னர் சோலாப்பூரில் இருந்து புனேவிற்கு குடிபெயர்ந்தார்.

பிரார்த்தனை செய்து விட்டு 17வது மாடியில் இருந்து குதித்த தொழிலதிபர் - என்ன காரணம்? | Pune Entrepreneur Prays Before Jump From 17 Floor

இந்நிலையில், மாலை 4 மணியளவில் விசாப்பூர் சாலையில் உள்ள பனாஸ் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு வந்த அவர், தடுப்பு சுவர் இல்லாத 17வது மாடிக்கு சென்று, மாடியின் விளிம்பில் நின்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.

இதனை கவனித்த பொதுமக்கள், கட்டிட காவலாளிக்கு தகவல் தெரிவிக்க,உடனடியாக அவர் அங்கிருந்து ஊழியர் ஒருவரை அழைத்து கொண்டு, 17வது மாடிக்கு சென்று சுனில் மோதிலால் சதரங்கனியை சமாதானம் செய்து அழைத்து வந்தனர்.

10வது மாடிக்கு வந்த போது எனது கார் சாவியை மேலே வைத்து விட்டு வந்ததாக தெரிவித்த அவர், மீண்டும் 17வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.

இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ள நிலையில், அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மாடியில் இருந்து குதிக்கும் முன்னர் அவர் பிரார்த்தனை செய்வதும், அதன் பின்னர் நின்றவாறே குதிக்க பயந்த அவர் மெதுவாக படுக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

என்ன காரணத்திற்காக உயிரை மாய்த்துக்கொண்டார் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில், அவர் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடனில் சிக்கியுள்ளதாகவும், இதனால் தான் அவர் இந்த முடிவை எடுத்ததாக அவரின் குடும்பத்தினர் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவரது தந்தை மோதிலால் பேக்கரியைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தியுள்ளார். அவரது தந்தை இறந்த பிறகு சுனில் சடரங்கனி தொழிலை ஏற்று நடத்தியுள்ளார்.

ஆனால் கடன் காரணமாக பேக்கரியை விற்று விட்டார். உயிரிழந்த சுனில் மோதிலாலுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒருவர் வெளிநாட்டிலும், மற்றொருவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு புனேவிலும் குடியேறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *