தென் ஆப்ரிக்காவில் அமைந்துள்ள ம்போனெங் (Mponeng) தங்கச் சுரங்கம், உலகின் மிக ஆழமான தங்கச் சுரங்கமாக கருதப்படுகிறது.
இந்த சுரங்கம், பூமியின் அடியில் சுமார் 2.5 மைல் (4 கிலோமீட்டர்) ஆழம் வரை நீள்கிறது. இது கிராண்ட் கேன்யன் பள்ளத்தாக்கின் ஆழத்தை விட இருமடங்கு அதிகம்.
ஒவ்வொரு நாளும், சுமார் 4,000 தொழிலாளர்கள் இந்த சுரங்கத்தில் பணிபுரிகின்றனர். அவர்கள் முதலில் 120 பேரை ஒரே நேரத்தில் ஏற்றக்கூடிய பெரிய எலிவேட்டரில் இறங்குகின்றனர்.
முதல் இறக்கம் மட்டும் 1.6 மைல் ஆழம் வரை செல்கிறது. அதன்பின் மற்றொரு எலிவேட்டர் மற்றும் நடைபயணம் அல்லது வாகனப் பயணம் மூலம் அடிப்பகுதிக்கு செல்வார்கள்.

சுரங்கத்தின் அடிப்பகுதியில் வெப்பநிலை 140°F (சுமார் 60°C) வரை அதிகரிக்கிறது.
இதனால், பொறியாளர்கள் பனியை உப்பு கலவையுடன் அடியில் பம்ப் செய்து, விசிறிகள் மூலம் குளிர்ந்த காற்றை உருவாக்குகின்றனர். இதனால் வெப்பநிலை 86°F (சுமார் 30°C) வரை கட்டுப்படுத்தப்படுகிறது.
ம்போனெங் சுரங்கம், தென் ஆப்ரிக்காவின் விட்வாட்டர்ஸ்ராண்ட் (Witwatersrand) பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதி, உலகின் மிகப்பெரிய தங்கச் சுரங்க வளங்களை கொண்டதாக அறியப்படுகிறது. ஜொஹான்ஸ்பர்க் நகரம் உருவாக காரணமான தங்கக் கண்டுபிடிப்பு இதே பகுதியில் நடந்தது.
ஒவ்வொரு நாளும் சுமார் 6,000 டன் கற்கள் சுரங்கத்திலிருந்து எடுக்கப்படுகின்றன. 2022-ஆம் ஆண்டு, இந்த சுரங்கம் 200,000 அவுன்ஸ் தங்கம் உற்பத்தி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய கணக்கீட்டின்படி, இந்த சுரங்கம் 2029 வரை செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ம்போனெங் தங்கச் சுரங்கம், உலகின் மிக ஆபத்தான மற்றும் சவாலான பணியிடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.




