அம்பானி மற்றும் பிளாக்ராக் CEO இருவரும் இந்தியர்களை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஊக்குவிகின்றனர்.
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் உலகின் மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனமான பிளாக்ராக்கின் (BlackRock) தலைமை நிர்வாக அதிகாரி லாரி ஃபிங்க் (LarryFink), இந்தியர்கள் தங்கள் சேமிப்புகளை தங்கத்தில் அல்ல, பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
அவர்கள் கூறியதாவது,
இந்தியர்கள் உலகளவில் அதிக அளவில் தங்கம் வாங்குபவர்களாக இருந்தாலும், அது உற்பத்தி செய்யாத (unproductive) சொத்து எனக் கருதப்படுகிறது. அதற்கு பதிலாக, பங்குச் சந்தையில் முதலீடு செய்வது நீண்ட கால வளர்ச்சியை அளிக்கும்.
“பங்குச் சந்தையில் பணம் சேர்த்தால் அது கூட்டு வட்டி மூலம் பெருகும். ஆனால் தங்கம், அந்த அளவுக்கு பயனளிக்காது” என அம்பானி தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் மற்றும் பிளாக்ராக் இணைந்து கடந்த ஆண்டு Jio BlackRock Asset Management என்ற நிறுவனத்தை தொடங்கி, இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் சேவைகளை அறிமுகப்படுத்தியது. 2025 டிசம்பர் மாதம் வரை, இந்நிறுவனம் ரூ.31,980 கோடி மதிப்பிலான சொத்துகளை நிர்வகித்துள்ளது.
லாரி ஃபிங்க், “அடுத்த 20 முதல் 25 ஆண்டுகள் இந்தியாவின் காலம் ஆகும். இந்தியர்கள் தங்கள் நாட்டின் வளர்ச்சியில் பங்குச் சந்தை மூலம் முதலீடு செய்ய வேண்டும். தங்கம் அந்த அளவுக்கு வளர்ச்சி தராது” எனக் கூறியுள்ளார்.
அறிக்கையின்படி, இந்தியர்கள் தங்கள் குடும்பச் சொத்துகளில் 59 சதவீதம் தங்கம் மற்றும் நிலத்தில் வைத்துள்ளனர். ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் வேகமாக அதிகரித்து வருகின்றன.
மேலும், SIP (Systematic Investment Plans) முதலீடு, 2021-இல் இருந்ததை விட 2025-இல் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.




