16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு… ஸ்பெயின் பிரதமரின் முடிவு: எலோன் மஸ்க் சொன்ன அந்த வார்த்தை

2 Min Read

ஐரோப்பாவில் தொழில்நுட்பத்திற்கு எதிரான மனப்பான்மைகள் இறுகி வருவதால், இளையோர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய ஸ்பெயின் முன்மொழிந்துள்ளது.

தடை விதிப்பது

இதனால், ஸ்பெயின் பிரதமருக்கு எதிராக டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது.

16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு... ஸ்பெயின் பிரதமரின் முடிவு: எலோன் மஸ்க் சொன்ன அந்த வார்த்தை | Musk Calls Spanish Pm A Tyrant

ஸ்பெயினில், 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களுக்குத் தடை விதிப்பது உட்பட பல நடவடிக்கைகளை அரசாங்கம் தயாரித்து வருவதாக பிரதமர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்தார்.

டிஜிட்டல் உலகில் நிலவும் கட்டுப்பாடற்ற சூழலிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கவும், வெறுப்பு மற்றும் தீங்கு விளைவிக்கும் கருத்துக்களுக்கு தொழில்நுட்ப நிறுவனங்களைப் பொறுப்பேற்க வைப்பதாகவும் உறுதியளித்தர்.

சமூக ஊடகங்கள் ஒரு தோல்வியடைந்த நிலையைப் போலச் செயல்படுவதாலும், அங்குச் சட்டங்கள் புறக்கணிக்கப்பட்டு குற்றங்கள் சகித்துக்கொள்ளப்படுவதாலும், அவசர நடவடிக்கை தேவை என்று சான்செஸ் செவ்வாயன்று கூறினார்.

மட்டுமின்றி, 500,000 புலம்பெயர் மக்களுக்கு குடியுரிமை வழங்கும் தமது முடிவு தொடர்பில் எக்ஸ் பக்கத்தில் வெளியான உண்மைக்கு புறம்பான தகவல்களே முதமையான சன்று என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எலோன் மஸ்க்கும் உண்மையில் ஒரு புலம்பெயர் நபர் என்பதையும் சான்செஸ் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், ஸ்பெயின் பிரதமருக்கு பதிலளித்துள்ள எலோன் மஸ்க், அருவருப்பான இந்த சான்செஸ் ஒரு கொடுங்கோலன் மட்டுமின்றி, ஸ்பெயின் மக்களுக்குத் துரோகம் செய்பர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடுமையான நிலைப்பாடு

அத்துடன், சான்செஸ் தான் உண்மையான பாசிச சர்வாதிகாரி எனவும் கொந்தளித்துள்ளார். இதனிடையே, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் இதேபோன்ற தடையை அறிவிக்க கிரீஸ் நாடும் தயாராகி வருகிறது என்று ஒரு மூத்த அரசாங்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

டிசம்பர் மாதம், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இதுபோன்ற தளங்களுக்கான அணுகலைத் தடை செய்த முதல் நாடாக அவுஸ்திரேலியா அறியப்பட்ட நிலையில்,

16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு... ஸ்பெயின் பிரதமரின் முடிவு: எலோன் மஸ்க் சொன்ன அந்த வார்த்தை | Musk Calls Spanish Pm A Tyrant

சமூக ஊடகங்கள் மீது கடுமையான நிலைப்பாடுகளை எடுக்கும் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் ஸ்பெயின் மற்றும் கிரீஸும் இணையவிருப்பதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், ஸ்பெயினில் உள்ள மக்களில் சுமார் 82 சதவீதம் பேர், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *